நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

முன்னாள் உறுப்பினர்களை ஏற்றுக் கொள்வதில் அம்னோவுடன் ஒப்பிட வேண்டாம்: டான்ஸ்ரீ மொஹைதின்

ஷாஆலம்:

பதவி நீக்கம் செய்யப்பட்ட அல்லது இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்களை மீண்டும் பதவியில் அமர்த்தும் விவகாரத்தில் அம்னோவுடன் பெர்சத்து கட்சியை ஒப்பிட வேண்டாம்.

பெர்சத்து கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் கூறினார்.

சம்பந்தப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் தாக்கம் இன்னும் உணரப்பட்டு வருகிறது.

சமீபத்தில் அம்னோ கட்சி செய்தது போல, முன்னாள் உறுப்பினர்களை நிபந்தனையின்றி மீண்டும் பதவியில் அமர்த்த பெர்சத்து கட்சி ஏதாவது செய்யுமா என்று கேட்கப்பட்டபோது மொஹைதின் இவ்வாறு கூறினார்.

நாம் நம்மை அம்னோவுடன் ஒப்பிட முடியாது. இந்த நடவடிக்கை இப்போதுதான் எடுக்கப்பட்டுள்ளது, அதன் விளைவுகள் இன்னும் உணரப்பட்டு வருகின்றன.

இன்றுவரை, நாங்கள் இந்த முடிவை உறுதிசெய்கிறோம்.

எந்தக் கட்சியாவது மேல்முறையீடு செய்யுமா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது என்று பெர்சத்து சிலாங்கூர் மாநாட்டிற்குப் பிறகு நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset