நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சோகோவிற்கு முன் பட்டாசு வெடித்த சம்பவத்தின் சூத்திரதாரிகளை போலிஸ் தேடி வருகிறது

கோலாலம்பூர்:

சோகோவிற்கு முன் பட்டாசு வெடித்த சம்பவத்தின் சூத்திரதாரிகளை போலிஸ் தேடி வருகிறது.

டாங் வாங்கி மாவட்ட போலிஸ் தலைவர் சஸாலி ஆடம் இதனை கூறினார்.

இன்று மாலை இங்குள்ள சோகோ வணிக வளாகத்திற்கு முன்னால், டான்ஸ்ரீ அஸாம் பாகிக்கு எதிரான போராட்டப் பேரணி நடந்தது.

இந்த பேரணியின் போது  பட்டாசு வெடித்த சம்பவத்தின் சூத்திரதாரியை போலிசார் தேடி வருகின்றனர்.

இதில், சம்பவம் நடந்த இடத்தில் ஆதாரங்களைச் சேகரிப்பதும், இந்தக் குழப்பத்தை ஏற்படுத்திய தரப்பினரைக் கண்டறிவதும் அடங்கும்.

பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கிய கூட்டத்தைச் சீர்குலைக்க யாரேனும் முயன்றார்களா என்பதை இதுவரை தனது துறையால் உறுதிப்படுத்த முடியவில்லை.

அதை எங்களால் உறுதிப்படுத்த முடியாது. நாங்கள் இதுகுறித்து விசாரணை நடத்துவோம்.

அத்துடன், பட்டாசுகளை வழங்கியவர் எங்கிருந்து வந்தார் என்பது உட்பட, முடிந்தவரை அதிக ஆதாரங்களைச் சேகரிக்கவும் முயற்சிப்போம் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset