செய்திகள் மலேசியா
திட்டமிடப்பட்ட அஸாம் பாக்கிக்கு எதிரான பேரணி பிசுபிசுத்தது
கோலாலம்பூர்:
டாங் வாங்கி மாவட்ட போலிஸ் தலைமையகத்தை விட்டு, போலிஸ் பணியாளர்கள் சோகோ வணிக வளாகத்தை நோக்கிச் செல்வதை இன்று காண முடிந்தது. அங்கு, 'ஹிம்புனான் தங்காப் அஸாம் பாக்கி'க்கு எதிரான பேரணி நடத்த ஆர்ப்பாட்டாக்காரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது
இருப்பினும், சோகோவிற்கு அருகிலுள்ள ஜாலான் துங்கு அப்துல் ரஹ்மானைச் சுற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மக்கள் கூட்டம் குவியும் என்ற முந்தைய எதிர்பார்ப்புகள் இருந்தபோதிலும், அந்தப் பகுதி அமைதியாகக் காணப்பட்டது.
மதியம் 1.30 மணி நிலவரப்படி, அந்தப் பகுதியில் தனிநபர்கள் அல்லது குழுக்கள் கூடுவதற்கான எந்த அறிகுறிகளும் இருக்கவில்லை, அதே போல் பதாகைகளை ஏந்தியவர்களும் காணப்படவில்லை.
இடையூறு எதுவும் இல்லாமல் வணிக நடவடிக்கைகள் வழக்கம் போல் தொடர்ந்தன.
பொது ஒழுங்கைப் பேணுவதற்கும், எதிர்பாராத சம்பவங்களைத் தடுப்பதற்குமான கண்காணிப்பு, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல போலிஸார் அந்தப் பகுதியைச் சுற்றி நிறுத்தப்பட்டிருந்தனர்.
அந்த இடத்தில் பேரணி தொடர்பான எந்த நடவடிக்கையும் கண்டறியப்படவில்லை என்றாலும், எந்தவொரு முன்னேற்றத்திற்கும் அதிகாரிகள் தயார்நிலையில் இருந்ததாகத் தெரிகிறது.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 25, 2026, 9:09 pm
அசாம் பாக்கிக்கு எதிரான பேரணி எம்ஏசிசியில் விரிவான மாற்றத்தை வலியுறுத்துகிறது
April 25, 2026, 9:08 pm
எம்ஏசிசியை வழிநடத்த அப்துல் ஹலிம் அமான் பொருத்தமானவர்: டத்தோஸ்ரீ அன்வார்
April 25, 2026, 9:04 pm
எனது அரசியல் நிலைப்பாட்டை ஜூன் மாதத்தில் அறிவிப்பேன்: ரபிசி
April 25, 2026, 9:03 pm
சோகோவிற்கு முன் பட்டாசு வெடித்த சம்பவத்தின் சூத்திரதாரிகளை போலிஸ் தேடி வருகிறது
April 25, 2026, 5:26 pm
அரசியல் விமர்சனங்களுக்கு அஞ்சமாட்டோம்: பினாங்கிற்கு 60% வளர்ச்சியை உறுதி செய்தது மடானி அரசு
April 25, 2026, 4:36 pm
"சமூக வலைதள விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள்": ஜே.பி.ஜே.-க்கு பிரதமர் அன்வார் அறிவுரை
April 25, 2026, 4:07 pm
