நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசு நிலங்களில் புதிய கட்டுமானங்கள், முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களின் விரிவாக்கம் இனி மேற்கொள்ளப்படாது: ஹன்னா இயோ

கோலாலம்பூர்:

அரசு நிலங்களில் புதிய கட்டுமானங்கள், முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களின் விரிவாக்கம் இனி மேற்கொள்ளப்படாது.

பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோ இதனை கூறினார்.

இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வருகிறது.

கூட்டரசுப் பிரதேசங்களில் உள்ள அரசு நிலங்களில், முன் அனுமதி இல்லாமல் முஸ்லிம் அல்லாதோரின் வழிபாட்டுத் தலங்களின் புதிய கட்டுமானமோ அல்லது விரிவாக்கமோ அனுமதிக்கப்படாது. 

மேலும், எந்தவொரு மீறல் மீதும் உள்ளூர் அதிகாரிகளால் அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் இந்த உத்தரவு, கூட்டரசுப் பிரதேசங்களில் உள்ள மத அமைப்புகளைக் கடுமையாகக் கண்காணிப்பதை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது.

இந்த நடவடிக்கை மேலும் அத்துமீறல்களைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கின்றது.

குறிப்பாக  மலேசியாவின் பன்முக சமூகத்தில் உள்ளூர் சமூகங்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, அமலாக்கம் மிகுந்த எச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்படும் என்று ஹன்னா இயோ கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset