செய்திகள் உலகம்
லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 27 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர்: சர்வதேச ஊடக சங்கம்
இஸ்தான்புல்:
கடந்த மார்ச் 2 முதல் லெபனானில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 27 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று லெபனான் பத்திரிகை ஆசிரியர்கள் சங்கத்தின் வியாழக்கிழமை அறிக்கையை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் தெற்கில் உள்ள தய்ரி நகரில் பத்திரிகையாளர்கள் குழுவை இஸ்ரேல் குறிவைத்ததை அந்த சங்கம் கண்டித்துள்ளது.
இந்தத் தாக்குதலில் பத்திரிகையாளர் அமல் கலீல் கொல்லப்பட்டார்.
அவரது சக ஊழியர் ஜெய்னப் ஃபராஜ் காயமடைந்தார்.
கலீல் இதற்கு முன்னர் இஸ்ரேலிய இராணுவத்திடமிருந்து மரண அச்சுறுத்தல்களைப் பெற்றிருந்தார்.
அவரது மரணத்துடன், கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள், ஊடகப் பணியாளர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கை தெரிவித்தது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 24, 2026, 5:23 pm
2,700 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாடு திரும்பிய பூர்வகுடிகள்
April 24, 2026, 1:04 pm
தாய்லாந்தின் மெகா திட்டம்: 2 லட்சம் வேலைவாய்ப்புகளுடன் உருவாகிறது புதிய வர்த்தகப் பாதை
April 24, 2026, 12:37 pm
எரிசக்தித் துறையில் புதிய கூட்டணி: இந்தோனேசியாவிற்குச் சலுகை விலையில் எண்ணெய் வழங்க ரஷ்யா சம்மதம்
April 23, 2026, 4:24 pm
பிரிட்டனில் சிகரெட்டுக்கு தடை: நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது
April 23, 2026, 3:00 pm
ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் ராணுவம்
April 23, 2026, 12:58 pm
பாலி விடுதியில் கைவரிசை காட்டிய இந்தியச் சுற்றுலாப் பயணிகள்: சோதனையில் சிக்கிய பொருட்கள்
April 23, 2026, 9:55 am
