நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் தமிழ் சமூகத்தின் அர்ப்பணிப்புள்ள தூணாகத் திகழ்ந்த மா. அன்பழகன் மறைவு; ராயல் கிங்ஸ் நிறுவனர் சிராஜுதீன் இரங்கல் 

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் தமிழ் சமூகத்தின் அர்ப்பணிப்புள்ள தூணாகத் திகழ்ந்த மா. அன்பழகன் அவர்களின் மறைவுக்கு, ஆழ்ந்த வருத்தத்துடன்  மனமார்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்வதாக சிங்கப்பூரின் பிரபல வர்த்தகரும் ராயல் கிங்ஸ் நிறுவனத்தின் தலைவரும் நிறுவனருமான சிராஜுதீன் கூறினார். 

அவர் தமிழ் மொழி, கலாச்சாரத்தின் மீது பேரார்வம் கொண்ட ஒரு தமிழ் ஆர்வலராக இருந்தது மட்டுமல்லாமல், தனது சேவையாலும் மனிதநேயத்தாலும் பலரின் வாழ்க்கையை உயர்த்திய ஒரு தன்னலமற்ற மனிதராகவும் விளங்கினார். அவரது ஆற்றல் மிக்க படைப்புகளும் பங்களிப்புகளும் தமிழ் சமூகத்தின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று சிராஜுதீன் தெரிவித்தார்..

“அர்த்தமுள்ள செயல்களில் ஈடுபடுங்கள் — வாழ்க்கை அதன் உண்மையான நோக்கத்தைக் கண்டடையும்”

அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். இந்த இக்கட்டான நேரத்தில், அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு இறைவன் அழகிய பொறுமையை வழங்குவானாக என்று அவர் மேலும் கூறினார். 

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset