செய்திகள் உலகம்
பாலி விடுதியில் கைவரிசை காட்டிய இந்தியச் சுற்றுலாப் பயணிகள்: சோதனையில் சிக்கிய பொருட்கள்
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் பாலித் தீவில் உள்ள சொகுசு விடுதி ஒன்றில் தங்கியிருந்த இந்தியச் சுற்றுலாப் பயணிகள் நால்வர், அங்கிருந்த பொருட்களைத் திருடிய சம்பவம் இணையதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விடுதியிலிருந்து வெளியேறும் வேளையில், அவர்கள் கொண்டு வந்த பைகளை ஊழியர்கள் சோதனையிட்டபோது இந்தத் திருட்டுச் சம்பவம் அம்பலமானது.
பாலியின் உபுட் (Ubud) பகுதியில் உள்ள அந்த விடுதியில் கடந்த ஏப்ரல் 16 முதல் 19-ஆம் தேதி வரை தங்கியிருந்த அந்தச் சுற்றுலாப் பயணிகள், விடுதிக்குச் சொந்தமான துண்டுகள், கூந்தல் உலர்த்தும் இயந்திரம் (Hair dryer), குளியல் ஆடைகள், தரை விரிப்புகள், தொலைக்காட்சித் திரைக் கருவி (Remote) உள்ளிட்ட பல பொருட்களைத் தங்கள் பைகளில் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான காணொலி சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரது விமர்சனங்களுக்கும் உள்ளானது.
இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த கியான்யார் மாவட்டக் காவல்துறை, இது தொடர்பாக எவ்விதப் புகாரும் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தியது.
திருடப்பட்ட அனைத்துப் பொருட்களையும் அந்தச் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் விடுதி நிர்வாகத்திடமே ஒப்படைத்ததைத் தொடர்ந்து, இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட சுமுக உடன்படிக்கையின் அடிப்படையில் இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டது.
எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அந்தச் சுற்றுலாப் பயணிகள் விடுதியிலிருந்து வெளியேற அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும், சர்வதேச அளவில் இச்சம்பவம் இந்தியச் சுற்றுலாப் பயணிகளின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக நெட்டிசன்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 23, 2026, 4:24 pm
பிரிட்டனில் சிகரெட்டுக்கு தடை: நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது
April 23, 2026, 3:00 pm
ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் ராணுவம்
April 23, 2026, 9:55 am
மலாக்கா நீரிணையில் வரி விதிப்பு விவகாரம்; இந்தோனேசியாவின் திட்டத்திற்குச் சிங்கப்பூர் எதிர்ப்பு
April 22, 2026, 2:41 pm
பயணிகளின் வசதிக்காக 6 விமான நிலையங்கள் தயார்: சவுதி அரேபியாவின் பிரம்மாண்ட ஏற்பாடு
April 22, 2026, 12:38 pm
ஜப்பானைத் தொடரும் கரடி அச்சுறுத்தல்: தேடுதல் வேட்டையில் நேர்ந்த விபரீதம்
April 22, 2026, 11:36 am
டீசல் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி: ஜூலை 2026 முதல் இந்தோனேசியாவில் 'பி50' அமல்
April 22, 2026, 11:06 am
MH17 வழக்கில் உள் ஆவணங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை: ஈ.சி.ஹ்.ஆர்
April 22, 2026, 10:23 am
ஏறத்தாழ 8,000 புலம்பெயர்ந்தோரின் உயிரிழப்புகள்: ஐ.ஓ.எம் அறிக்கையில் வெளிவரும் துயரம்
April 22, 2026, 10:17 am
