செய்திகள் உலகம்
ஹார்முஸ் நீரிணையைக் கடக்க முயன்ற 3 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான் ராணுவம்
டெஹ்ரான்:
அமெரிக்கா - ஈரான் இடையேயான 2 வார கால இடைக்கால போர் நிறுத்தம் நேற்றுடன் முடிந்தது. இந்நிலையில், காலவரையின்றி சண்டை நிறுத்தத்தை நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று அறிவித்தார். ஆனால், மாறி மாறி பேசிவரும் டிரம்புக்கு ஈரான் எந்த பதிலும் அளிக்கவில்லை.
இந்நிலையில், ஈரான் சரக்குக் கப்பல்கள் சிலவற்றை அமெரிக்கா துப்பாக்கிச் சூடு நடத்தி சிறைபிடித்துள்ளது. மேலும், ஈரான் துறைமுகங்களை தொடர்ந்து முற்றுகை நிலையில் வைத்திருக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதனால் ஈரானின் கச்சா எண்ணெய் விற்பனை முடங்கியுள்ளது.
அமெரிக்காவின் நெருக்கடிக்கு பதிலடி அளிக்கும் வகையில், ஹார்முஸ் நீரிணைப் பகுதியைக் கடக்க முயன்ற 3 சரக்குக் கப்பல்கள் மீது ஈரான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது.
இதில் ஒரு சரக்குக் கப்பல் சேதம் அடைந்துள்ளது. ஆனால், ஊழியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்தத் தாக்குதல் மூலம் ஹார்முஸ் நீரிணை தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. தங்கள் அனுமதியின்றி எந்தக் கப்பலும் ஹார்முஸ் நீரிணையைக் கடந்து செல்ல முடியாது என ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 23, 2026, 4:24 pm
பிரிட்டனில் சிகரெட்டுக்கு தடை: நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது
April 23, 2026, 12:58 pm
பாலி விடுதியில் கைவரிசை காட்டிய இந்தியச் சுற்றுலாப் பயணிகள்: சோதனையில் சிக்கிய பொருட்கள்
April 23, 2026, 9:55 am
மலாக்கா நீரிணையில் வரி விதிப்பு விவகாரம்; இந்தோனேசியாவின் திட்டத்திற்குச் சிங்கப்பூர் எதிர்ப்பு
April 22, 2026, 2:41 pm
பயணிகளின் வசதிக்காக 6 விமான நிலையங்கள் தயார்: சவுதி அரேபியாவின் பிரம்மாண்ட ஏற்பாடு
April 22, 2026, 12:38 pm
ஜப்பானைத் தொடரும் கரடி அச்சுறுத்தல்: தேடுதல் வேட்டையில் நேர்ந்த விபரீதம்
April 22, 2026, 11:36 am
டீசல் இறக்குமதிக்கு முற்றுப்புள்ளி: ஜூலை 2026 முதல் இந்தோனேசியாவில் 'பி50' அமல்
April 22, 2026, 11:06 am
MH17 வழக்கில் உள் ஆவணங்களை வெளியிட வேண்டிய அவசியமில்லை: ஈ.சி.ஹ்.ஆர்
April 22, 2026, 10:23 am
ஏறத்தாழ 8,000 புலம்பெயர்ந்தோரின் உயிரிழப்புகள்: ஐ.ஓ.எம் அறிக்கையில் வெளிவரும் துயரம்
April 22, 2026, 10:17 am
