நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கிள்ளானில் நடந்த கோர விபத்து வழக்கில் சட்டத்துறை தலைவர் ஒரு சட்டப் பிரிவுக்குக் கட்டுப்பட்டவர் அல்ல: வழக்கறிஞர்

கோலாலம்பூர்:

கிள்ளானில் நடந்த கோர விபத்து வழக்கில்  சட்டத்துறை தலைவர் ஒரு சட்டப்பிரிவுக்குக் கட்டுப்பட்டவர் அல்ல என்று குற்றவியல் வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.

மது அல்லது போதைப்பொருள் போதையில் ஏற்படும் உயிரிழப்பு விபத்து வழக்குகளில் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 44 பொதுவாகப் பயன்படுத்தப்பட்டாலும்,

சட்டத்துறை தலைவர் ஒரே ஒரு விதியால் மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை.

கிள்ளானில் நடந்த ஒரு உயிரிழப்பு விபத்தில் ஒருவர் மீது சுமத்தப்பட்ட கொலைக் குற்றச்சாட்டு குறித்துக் கருத்து தெரிவித்த வழக்கறிஞர் கிட்சன் ஃபூங், அத்தகைய குற்றச்சாட்டு அரிதானதாக இருக்கலாம்.

ஆனால் இது முதல் முறையல்ல என்றார்.

வேறு ஒரு குற்றச்சாட்டு மிகவும் பொருத்தமானதா என்பது பிரச்சினை அல்ல. மாறாக அந்தக் குற்றச்சாட்டை நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியுமா என்பதே பிரச்சினை.

சுருக்கமாகச் சொன்னால், பொதுவானது அசாதாரணமானது அல்.

உண்மையான சோதனை என்பது ஆதாரம்தான். அது இதற்கு முன்பு எத்தனை முறை செய்யப்பட்டுள்ளது என்பதல்ல என்று ஃபூங் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset