நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நெகிரி செம்பிலான் ஆளுநருக்கு எதிரான நடவடிக்கை செல்லுபடியாகும்; ஆனால் அது இணக்கமாக தீர்க்கப்பட வேண்டும்: டான்ஶ்ரீ ராய்ஸ் யாத்திம்

கோலாலம்பூர்:

நெகிரி செம்பிலான் ஆளுநருக்கு எதிரான நடவடிக்கை செல்லுபடியாகும். ஆனால் அது இணக்கமாக முறையின் தீர்க்கப்பட வேண்டும்.

நெகிரி செம்பிலானின் முன்னாள் மந்திரி புசார் டான்ஶ்ரீ ராய்ஸ் யாத்திம் இதனை கூறினார்.

நெகிரி செம்பிலானின் ஆளுநர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான நான்கு  அரசு குடும்பங்களின் நடவடிக்கை சட்டப்பூர்வமானது.

இருப்பினும் எந்தவொரு தரப்பினரின் பழக்கவழக்கங்களையும் பெயர்களையும் களங்கப்படுத்தாத வகையில், இந்த நெருக்கடியை இணக்கமாகத் தீர்க்க வேண்டும்.

1959 ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் அரசியலமைப்பின் 10ஆவது பிரிவின்படி, சுங்கை உஜோங், ஜெலுபு, ரெம்பாவ், ஜோஹோல் சட்டங்களுக்கு ஆளுநரை பதவியிலிருந்து நீக்கும் உரிமை உள்ளது என்று ரைஸ் விளக்கினார்.

இருப்பினும், கேள்விக்குரிய நான்கு சட்டங்களும் இரண்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

முதலாவதாக ஒரு முழுமையான அறிக்கை இருக்க வேண்டும். இரண்டாவதாக, குற்றங்கள் பட்டியலிடப்பட வேண்டும்.

அதன்பிறகு, அந்த ஆவணத்தில் முத்திரையிடப்பட்டு, வழக்கமான வாக்குமூலம் எனப்படும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டு, அதன் கீழே மந்திரி பெசார் ஒரு சாட்சியாகக் கையொப்பமிட வேண்டும்.

மந்திரி புசார்  தனது சாட்சியை அளிக்க மறுத்தால், அவர் 1959 ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் அரசியலமைப்பின் விதிகளை நிறைவேற்றுவதில் அலட்சியமாக இருந்ததாகக் கருதப்படுவார் என்று டான்ஶ்ரீ ராய்ஸ் யாத்திம் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset