செய்திகள் மலேசியா
கண்ணீரில் நனைந்த மனிதாபிமானம்: டிக்டாக் பரிசாகக் கிடைத்த பணத்தை ஏழைகளுக்கு வழங்க நினைத்த இளைஞர்
கோலாலம்பூர்:
ஒரு மெக்கானிக்கும், அவரது வாடிக்கையாளரும் பெற்ற சுமார் 3,000 ரிங்கிட் பணத்தை ஒருவருக்கொருவர் நிராகரித்ததால், அவர்கள் சமூக ஊடகங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளனர். ஏனெனில், அதை நன்கொடையாகவும், தேவைப்படுபவர்களுக்கு உதவியாகவும் பயன்படுத்த விரும்பினர்.
அந்தச் சம்பவத்தில், அபாங் மின்யாக் ஹித்தாம் என்றும், அல்லது இயற்பெயரான முஹம்மத் யூசோஃப் முஹம்மத் நூர் என்றும் அழைக்கப்படும் மெக்கானிக், டிக்கி யாவ் என்று அழைக்கப்படும் வாடிக்கையாளர் வழங்கிய டிக்டாக் 'கிஃப்ட்' மூலம் கிடைத்த பணத்தை ஆரம்பத்தில் பெற்றுக் கொண்டார். அந்த வாடிக்கையாளர், அதில் ஒரு பகுதியை நன்கொடை நோக்கங்களுக்காக வழங்க விரும்புவதாகக் கூறினார்.
"இது நான் பெற்ற பணம், நான் அதை மீண்டும் நன்கொடையாக வழங்க விரும்புகிறேன்" என்று டிக்கி தெரிவித்தார்.
முஹம்மத் யூசோஃப் அந்தப் பணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ள மறுத்ததால், அந்தச் சூழ்நிலை உருக்கமானது. மாறாக, குழந்தைகளின் பள்ளிச் செலவுகள் உட்பட, தனது குடும்பத்தின் பயன்பாட்டிற்காக அதை வைத்துக் கொள்ளுமாறு டிக்கியை அவர் வற்புறுத்தினார்.
"இந்த அண்ணன் (டிக்கி) கிஃப்ட் பெற்றார். அது சுமார் 5,000 முதல் 6,000 ரிங்கிட் வரை இருக்கும். அந்த நன்கொடைப் பணத்தில் பாதியை எனக்குக் கொடுப்பதாக அவர் உறுதியளித்தார்.
"இருப்பினும், நான் அதை எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. இந்தப் பணத்தை நான் இந்த அண்ணனுக்கு (டிக்கி) திருப்பிக் கொடுக்கிறேன், ஏனெனில் அவரது குழந்தை பள்ளிக்குச் செல்ல வேண்டும். அவர் தொடர்ந்து வாழ்வதற்காக, நான் அதை மீண்டும் நன்கொடையாக வழங்குகிறேன். நான் பயன்பெற விரும்பவில்லை. நான் நேர்மையாக உதவ விரும்பினேன்" என்றார் அவர்.
அந்த நன்கொடையைத் தள்ளி விட இருவரும் பிடிவாதமாக இருந்ததால், சூழ்நிலை உருக்கமாக மாறியது.
பெரும்பாலான நிகரநிலைப் பயனர்கள், இரு தரப்பினரின் நேர்மையால் உருக்கமடைந்ததாகக் கூறினர். இது, மனிதநேய மதிப்புகளுக்கும், சமூகத்தில் இன்னும் நிலவும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் மனப்பான்மைக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்று விவரித்தனர்.
இதற்கு முன்னர், டிக்கியின் மோட்டார் சைக்கிள் சங்கிலி அறுந்து, ஸ்ப்ராக்கெட் பகுதி சேதமடைந்ததால், பணியிலிருந்து வீடு திரும்பும் வழியில் அவர் சிரமப்பட்டதைத் தொடர்ந்து, அவர்களின் கதை வைரலானது.
அப்போது அவரது வங்கிக் கணக்கில் 176 ரிங்கிட் பணம் மட்டுமே மீதமிருந்தது. அதே சமயம், பழுதுபார்க்கும் செலவு 145 ரிங்கிட்டாக இருந்தது.
இருப்பினும், முஹம்மத் யூசோஃப், அவர் எதிர்கொள்ளும் சிரமத்தைப் புரிந்துகொண்டதால், கட்டணத்தைப் பெற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 22, 2026, 1:53 pm
டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு வழக்கின் நிலை என்ன?: அமைச்சர் கோபிந்த் சிங் கேள்வி
April 22, 2026, 1:52 pm
போலிசார் ஒருவரின் தலையில் மிதித்த சம்பவம் அப்பட்டமான வன்முறை: வழக்கறிஞர் ராஜேஷ்
April 22, 2026, 10:43 am
