நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அறிவார்ந்த குறைபாடுடைய மாணவர்களின் வளர்ச்சி நிதிக்காக நாட்டிய சேவை நாட்டிய விழா: மே 30ஆம் தேதி நடைபெறும்

ஈப்போ:

அறிவார்ந்த குறைபாடுடைய மாணவர்களை பராமரித்து வரும் செமங்காட் மாஜூ பள்ளியின் வளர்ச்சி நிதிக்காக மே 30 ஆம் தேதி நிதி திரட்டும் விழாவை நடத்தவுள்ளது.

ஈப்போவில் ஜாலான் தம்புன் சாலையில்  உள்ள கலை பண்பாட்டு இலாகாவின் அரங்கில் மாலை 6.30 மணிக்கு இந்த நிகழ்வு நடைபெற உள்ளது என்று நிகழ்வின் ஒருங்கிணப்பாளர் க. நாச்சிமுத்து கூறினார்.

இந்த நிகழ்வில்  பரத கலாஞ்சலி நாட்டிய பள்ளியைச் சேர்ந்த மாணவிகள்  நாட்டிய சேவை என்ற தலைப்பில் நடன படைப்பை வழங்க உள்ளனர்.

இந்த நிகழ்வின் வழி திரட்டப்படும் நிதியாவும்  செம்பங்காட் மாஜூ  அறிவார்ந்த குறைபாடுடைய மாணவர்களின்  தேவைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று நாச்சி முத்து குறிப்பிட்டார்.

இந்த நிகழ்விற்கு பொது மக்களின் ஆதவை தேவை என்று அவர் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset