நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்

கேமரன்மலை:

தொடர் கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

கேமரன்மலை போலிஸ் தலைவர் அஸ்ரி ரம்லி இதனை கூறினார்.

இன்று பிற்பகல் கேமரன்மலை ஹபு ஹைட்ஸ் பகுதியில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

பிற்பகல் 2 மணிக்கு கனமழை தொடங்கியதால், ரிங்லெட் பிரதான சாலையில் சேற்று நீர் பெருக்கெடுத்து ஓடியது.

மலைப் பகுதிகளில் இருந்து வழிந்தோடும் நீர் பிரதான சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால், திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இருப்பினும், நிலைமை கட்டுப்பாட்டில் இருந்தது. மேலும் மாலையில்  நீர் வடிந்துவிட்டது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset