நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது

குவாந்தான்:

பகாங் சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் ஷாவால் பொதுமக்களுக்கு உதவிகள் வழங்கப்படும் என டிக்டாக்கில் பரப்பப்பட்டதை பகாங் அரண்மனை மறுத்தது.

பரிசுப் பெறுவதற்காக, பயனர்கள் அந்தக் கணக்கிற்கு செய்திகளையும் தொலைபேசி எண்களையும் அனுப்புமாறு கேட்கும் ஒரு போலி கணக்கு அந்தத் தளத்தில் உள்ளது.

பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில் அல்-சுல்தான் அப்துல்லாவின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி பொறுப்பற்ற தரப்பினரால் உருவாக்கப்பட்டதாகக் கருதப்படும் எந்தவொரு சமூக ஊடக கணக்குகளும் அவருக்கு சொந்தமானதில்லை.

மேலும் தெங்கு அம்புவான் பகாங் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியாவின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தும் போலி கணக்குகளுக்கும்,

குறிப்பாக முகநூல், டிக்டாக்கில் கணக்குகளுக்கும் இது பொருந்தும் என்று அவர் பகாங் அரண்மனையின் முகநூல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset