செய்திகள் மலேசியா
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
கோலாலம்பூர்:
இந்திராகாந்தி வழககில் புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது.
தனது மகளைக் கடத்திய முன்னாள் கணவரைக் கண்டுபிடிக்கத் தவறியதற்காக, ஐஜிபி, மூன்று பேருக்கு எதிராக ஆசிரியை எம். இந்திரா காந்தி தொடர்ந்த வழக்கில், புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்கக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டத்தோ முகமது ஜைனி மஸ்லான் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ஒருமனதாக அளித்த தீர்ப்பில்,
புதிய ஆதாரங்களை ஏற்றுக்கொள்வதற்கான தனது விருப்புரிமையைப் பயன்படுத்த நீதிமன்றத்திற்கு அனுமதிக்கும் எந்தவொரு சூழ்நிலையையும் அந்த மனு காட்டவில்லை என்று கண்டறிந்தது.
இந்த புதிய ஆதாரங்கள், முன்னர் கே. பத்மநாதன் என்று அறியப்பட்ட அவரது முன்னாள் கணவர் முகமது ரிதுவான் அப்துல்லா, பூடி 95, சாரா ஆகியவற்றைப் பயன்படுத்தியது தொடர்பானவை.
டத்தோ பைசா ஜமாலுடின், டத்தோ முகமது ராட்ஸி அப்துல் ஹமீத் ஆகியோருடன் அமர்ந்திருந்த நீதிபதி முகமது ஜைனி, மேல்முறையீட்டில் மனுதாரரால் கோரப்பட்ட சாட்சியம் உயர் நீதிமன்ற விசாரணையின் போது கிடைக்கவில்லை.
மேலும் விசாரணை முடிவடைந்த பின்னரே சமீபத்தில் வெளிவந்தது என்றும் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 6:01 pm
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
