நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோத்தா திங்கியில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; தனிப்பட்ட கடன் காரணமாக இருக்கலாம்: போலிஸ்

கோத்தா திங்கி:

கோத்தா திங்கியில்  மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தனிப்பட்ட கடன் பிரச்சினை காரணமாக இருக்கலாம்.

ஜொகூர் போலிஸ் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாத் இதனை கூறினார்.

இன்று இங்குள்ள தாமான் கோத்தா ஜெயாவில் துப்பாக்கிச் சூடு நடத்தது. இதில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
அவர்களை கொன்றதாக நம்பப்படும் முதியவரின் செயலுக்கு தனிப்பட்ட கடன் காரணமாக இருக்கலாம் என்ற சாத்தியக்கூற்றை போலிஸ் நிராகரிக்கவில்லை.

71 வயதான சந்தேக நபரிடம் செல்லுபடியாகும் துப்பாக்கி உரிமம் இருந்தது கண்டறியப்பட்டது.

இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்பவ இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் (மீ) தொலைவில் பிற்பகல் 2 மணியளவில் அந்த உள்ளூர்வாசி வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவரைச் சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும், எம் 104817 என்ற வரிசை எண்ணைக் கொண்ட ஷாட்கன் ரக துப்பாக்கியையும் போலிஸ் கைப்பற்றியதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்


தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset