செய்திகள் மலேசியா
மங்கா ஹாரும் மானிஸ் விளம்பரத்தை நம்பி ஏமாற்றம்: 25,000 ரிங்கிட்டை இழந்த வியாபாரி
கோலா திரங்கானு:
பேஸ்புக்கில் விளம்பரப்படுத்தப்பட்ட மங்கா ஹாரும் மானிஸ் விற்பனை மோசடிக் கும்பலால் ஏமாற்றப்பட்டதில், ஒரு வணிகர் 25,000 ரிங்கிட்டிற்க்கும் அதிகமாக இழந்துள்ளார்.
கோலா திரங்கானு மாவட்ட போலிஸ் உதவி ஆணையாளர் அஸ்லி முஹம்மத் நூர், 53 வயதுடைய பாதிக்கப்பட்ட ஆடவர், நேற்று மாலை 7.41 மணியளவில் கோலா திரங்கானு போலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார் என்று தெரிவித்தார்.
மங்கா ஹாரும் மானிஸை விற்பனை செய்யும் விளம்பரத்தால் பாதிக்கப்பட்டவர் ஈர்க்கப்பட்டதைத் தொடர்ந்து, சனிக்கிழமை மதியம் 4 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.
"பாதிக்கப்பட்டவர் பின்னர் விற்பனையாளரைத் தொடர்பு கொண்டார். விற்பனையாளர், பின்னர் கட்டண நோக்கங்களுக்காக, விரைவுப் பதில் (QR) குறியீட்டைக் கொண்ட ஒரு இணைப்பை அனுப்பினார். பாதிக்கப்பட்டவர், அந்தக் குறியீட்டை ஸ்கேன் செய்தார்.
"வழங்கப்பட்ட குறியீட்டை ஸ்கேன் செய்து முடித்ததும், தனது கைப்பேசி சுமார் 20 நிமிடங்கள் செயல்படவில்லை என்பதை பாதிக்கப்பட்டவர் கண்டுபிடித்தார்" என்றார் அவர்.
தான் மோசடிக்கு ஆளாகிவிட்டதாக சந்தேகித்த பாதிக்கப்பட்டவர், பின்னர் தனது வங்கியைத் தொடர்பு கொண்டார். மேலும், அங்கீகாரமின்றி, தனது வங்கிக் கணக்கில் இருந்து மூன்று பணப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாக பாதிக்கப்பட்டவருக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
8,264 ரிங்கிட், 8,642 ரிங்கிட், 8,374 ரிங்கிட் என மூன்று பணப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பதாகவும், இது மொத்தம் 25,280 ரிங்கிட் இழப்பாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
நேற்று மாலை 7.41 மணிக்கு பாதிக்கப்பட்டவர் போலிஸில் புகார் அளித்ததாகவும், தண்டனைச் சட்டத்தின் பிரிவு 420-ன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 19, 2026, 9:47 pm
கோத்தா திங்கியில் மூவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்; தனிப்பட்ட கடன் காரணமாக இருக்கலாம்: போலிஸ்
April 19, 2026, 9:46 pm
அம்பாங்கில் 16 நிமிடங்களுக்குள் 2 நிலச்சரிவுகள்
April 19, 2026, 9:45 pm
பெருநாள் திறந்த இல்ல உபசரிப்புகள் மக்களின் ஒற்றுமையை பிரதிபலிக்கிறது: குணராஜ்
April 19, 2026, 5:49 pm
கல்வி போதிக்கும் ஆசான்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
April 19, 2026, 5:26 pm
துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்
April 19, 2026, 5:03 pm
சண்டாக்கான் மிதக்கும் வீடுகளில் கோரத்தீ: 9,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு
April 19, 2026, 4:50 pm
