நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்பாங்கில் 16 நிமிடங்களுக்குள் 2 நிலச்சரிவுகள்

அம்பாங்:

இன்று பிற்பகல் பெய்த கனமழையைத் தொடர்ந்து அம்பாங்கில் 16 நிமிட இடைவெளியில் இரண்டு நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

ஆனால் இதில் எந்தக் கட்டிடங்களுக்கும் சேதமோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படவில்லை.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில்,

முதல் சம்பவம் பிற்பகல் 3.35 மணிக்கு, காம்பங் அம்பாங் இந்தாவில் உள்ள ஜாலான் இந்தா 4 என்ற முகவரியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் பின்புறம் உள்ள மலையடிவாரத்தில் நிகழ்ந்ததாகத் தெரிவித்தார்.

வீட்டின் பின்புறம் 20-20 அடி அளவிலான மலையடிவாரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் எந்தக் கட்டிடங்களும் சேதமடையவில்லை அல்லது உயிரிழப்புகள் ஏற்படவில்லை.

அதே சாலையில் உள்ள லாட் 1777 என்ற இடத்தில், 15க்கு 20 அடி உயரமுள்ள செங்குத்தான பாறையின் மீது மோதி வேன் சேதமடைந்தது.

சுமார் 16 நிமிடங்களில் இந்த சம்பவங்கள் நிகழ்ந்ததாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset