நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கல்வி போதிக்கும் ஆசான்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

கல்வி போதிக்கும் ஆசான்களை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்; அவர்களை எப்போதும் மறக்கக் கூடாது என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

விவேகானந்தா தமிழ்ப்பள்ளி, விவேகானந்தா  இடைநிலைப்பள்ளியின் ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில்  தலைமையேற்று கலந்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது'  - குறள் 103

என்ன பயன் கிடைக்கும் என்று எதிர்பாராமல் உதவி செய்பவர்கள்தான் ஆசிரியர்கள். 

அப்படி நம்மை ஏற்றிவிட்ட ஆசான்களை எப்போதும் நினைவில் வைத்திருந்து, அவர்களுக்காக நன்றி நவிலும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பது பாராட்டுக்குரியது. 

எனக்குக் கற்றுக் கொடுத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இவ்வேளையில் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset