செய்திகள் இந்தியா
மத்திய பிரதேச மாநிலத்தில் துப்பாக்கி முனையில் வங்கிக்கொள்ளை: ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள், ரொக்கம் களவு போயின
போபால்:
பட்டப்பகலில் வங்கியில் புகுந்து ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள், ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் சிங்க்ராவ்லி மாவட்டத்தில் மகாராஷ்டிர வங்கிக் கிளை உள்ளது. இந்த வங்கிக் கிளைக்கு நேற்று முன்தினம் பிற்பகலில் 2 பேர் வாடிக்கையாளர்கள் போல வந்தனர். அவர்கள் உள்ளே வந்தவுடன் அடுத்ததாக 3 பேர் உள்ளே நுழைந்தனர். உள்ளே வந்ததும் 5 பேரும் தங்களிடமிருந்த துப்பாக்கிகளை எடுத்து மேலே சுட்டு வாடிக்கையாளர்களை பயமுறுத்தினர். அனைவரையும் துப்பாக்கி முனையில் மிரட்டி வங்கி மேலாளரை அழைத்து லாக்கர் சாவிகளைக் கேட்டனர்.
அவர் தரமறுத்த போது அவரது தலையில் துப்பாக்கியின் பின்பகுதியால் தாக்கி சாவியைப் பிடுங்கினர். இதில் வங்கி மேலாளர் தலையில் காயமடைந்தார். 2 பேர் லாக்கர் ரூமில் நுழைந்து, வங்கிக் கிளையில் பொதுமக்கள் அடகு வைத்திருந்த நகைகளை அள்ளினர். மீதமிருந்த 3 பேரும் வாடிக்கையாளர்கள், வங்கி ஊழியர்களை துப்பாக்கி முனையில் நிறுத்தி வைத்திருந்தனர்.
20 நிமிடங்களில்.. அவர்கள் உள்ளே புகுந்த 20 நிமிடங்களில் தங்க நகைகள், ரொக்கத்தை கொள்ளை அடித்துக் கொண்டு தப்பிவிட்டனர். போலீஸார் வருவதற்குள் அவர்கள் தப்பியோடிவிட்டதாக வங்கி மேலாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து சிங்க்ராவ்லி போலீஸ் எஸ்.பி. மணீஷ் காத்ரி கூறும்போது, “பட்டப்பகலில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. 9 முதல் 10 கிலோ எடையுள்ள தங்க நகைகள், ரூ.20 லட்சம் ரொக்கம் என மொத்தம் ரூ.15 கோடி மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன.
வந்தவர்களில் ஒருவர் மட்டுமே ஹெல்மெட் போட்டு வந்துள்ளார். மற்றவர்கள் அனைவரும் முகங்களை மறைக்காமலேயே வந்துள்ளனர். அருகில் இருந்த கடைகளில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான முகங்களை வைத்து அவர்களைத் தேடி வருகிறோம். நகைகளைக் கொள்ளை அடித்ததும் அவர்கள் மோட்டார் சைக்கிள்களில் தப்பியோடி உள்ளனர்’’ என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருமாறும்: செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரை
August 14, 2026, 1:10 pm
ஆகஸ்ட் 15 ‘இந்திய தினம்’: அமெரிக்க மாகாணங்கள் பிரகடனம்
August 13, 2026, 5:18 pm
அருணாசல பிரதேச மாநில எல்லையையொட்டி படைகளைக் குவித்து வரும் சீனா
August 12, 2026, 6:04 pm
அமித் ஷாவின் பிம்பம் எனும் "பலூன்" காற்றிறங்கி விட்டது: ராகுல் கிண்டல்
August 12, 2026, 5:58 pm
இன்ஸ்டாகிராம் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிய பெண் திருமணமான 1 மணி நேரத்தில் மரணம்
August 7, 2026, 11:50 am
விமானத்தின் அவசர கதவைத் திறக்க முயற்சி செய்த கேராளவைச் சேர்ந்த நபர் கைது
August 7, 2026, 9:51 am
