நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு

புதுடெல்லி:

இந்திய அரசாங்கம், மோசடிகளுடன் தொடர்புள்ள இணையத்தளங்களையும் தரவுத்தளங்களையும் அகற்றும்படி Google நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

மோசடிக்காரர்கள் அந்தத் தளங்களைப் பயன்படுத்தி வங்கிகள், அரசாங்கச் சேவைத் தரப்புகள் போன்று பாவனைசெய்வதாய் அதிகாரிகள் கூறினர்.

அவர்கள் மக்களை போலிச் செயலிகளைப் பதிவிறக்கம்செய்யச் சொல்வதாகவும் கூறப்பட்டது.

வங்கி விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தக்கூடிய கடவுச் சொற்கள் முதலியவை களவாடப்படுகின்றன.

இந்த மாதம் குறைந்தது 57 இணையத்தளங்களும் தரவுத்தளங்களும் அகற்றப்பட்டன.

தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்களை அகற்றுவதற்காக இந்திய அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதாய் Google நிறுவனம் தெரிவித்தது.

ஆதாரம்: Reuters

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset