நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

கொல்கத்தாவில் ஷோரூமில் பயங்கர தீ விபத்து: 22 புதிய கார்கள் எரிந்து நாசம்

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் பங்க்ரா பகுதியில் உள்ள கார் ஷோரூமில் திங்கள்கிழமை அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 22 புதிய கார்கள் முற்றிலும் எரிந்து நாசமாயின. மேலும் 8 கார்கள் பலத்த சேதமடைந்தன. இருப்பினும், இதில் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

அதிகாலை 5 மணியளவில் அப்பகுதி மக்கள் முதலில் தீயைக் கண்டனர். உடனடியாக அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பல மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தன.

மேற்கு வங்கத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இரண்டு பெரிய ஹோட்டல் தீ விபத்துகள் நிகழ்ந்தன. அவற்றில் மொத்தம் 18 பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset