செய்திகள் இந்தியா
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
புதுடெல்லி:
இந்தியப் பகுதிக்குள் சீனா ஊடுருவியுள்ளதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக, மோடி அரசு வெளிப்படையாக விளக்கம் அளித்திருக்க வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.
வழக்கம்போல இந்தத் தகவல்கள் தவறானவை என்று அரசு மறுத்துள்ளது. ராணுவம் தனது கடமையை சிறப்பாகச் செய்து வரும் நிலையில், சீனாவுடனான எல்லை தொடர்பான முக்கியமான கேள்விகளுக்கு மத்திய அரசு தெளிவான தகவல்களை வழங்கவில்லை.
அயோத்தி ராமர் கோயிலுக்கு மக்கள் வழங்கிய காணிக்கை எவ்வளவு? எவ்வளவு தங்கம், வெள்ளி மற்றும் பிற விலைமதிப்புமிக்க பொருட்கள் சேகரிக்கப்பட்டன? அந்த சொத்துகளின் கணக்கு என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.
கீழ்நிலையில் உள்ள சிலரை மட்டும் சிறையில் அடைப்பதால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடாது. எனவே, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி பக்தர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
இளைஞர்களின் பிரச்சினைகள்:
மேலும், அரசின் தவறான கொள்கைகளே இளைஞர்களை ஆழ்ந்த விரக்திக்குள் தள்ளியுள்ளன. மத ரீதியான பதற்றத்தை உருவாக்கும் போட்டிக்கும், இலவசத் திட்டங்களுக்கான போட்டிக்கும் மத்தியில், இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு மிகக் கடுமையாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. கடந்த 12 ஆண்டுகளில் நாடு முழுவதும் 94,000 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
உயர்கல்வி தொடர்ந்து அதிக செலவு மிக்கதாக மாறி வருகிறது. கல்வி நிறுவனங்கள் அதிக அளவில் ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்புடையவர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுகிறது.
மேலும், மாணவர்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு அரசு உரிய கவனம் செலுத்தாமல் இருப்பதாலேயே மாணவர்கள் வீதிகளில் இறங்கி போராடும்நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு கார்கே கூறினார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருமாறும்: செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரை
August 14, 2026, 1:10 pm
ஆகஸ்ட் 15 ‘இந்திய தினம்’: அமெரிக்க மாகாணங்கள் பிரகடனம்
August 13, 2026, 5:18 pm
