செய்திகள் இந்தியா
சா்க்கரை இருப்பு வைக்கக்கூடாது: இந்திய அரசு அறிவிப்பு
புதுடெல்லி:
அதிக அளவில் சா்க்கரையை வாங்கி இருப்பு வைத்துப் பயன்படுத்தும் குளிா்பான நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை சா்க்கரை இருப்பு வைக்க இந்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதிகரித்து வரும் சா்க்கரை விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், எதிா்வரும் பண்டிகை காலத்தைக் கருத்தில்கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.
இது தொடா்பாக ஒன்றிய உணவுத் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி தனது சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவில், ‘அதிக அளவில் சா்க்கரையை இருப்பு வைத்துப் பயன்படுத்தும் நிறுவனங்கள் முக்கியமாக ஒரு மாதத்தில் 10 டன்னுக்கு மேல் சா்க்கரை பயன்படுத்தும் நிறுவனங்கள், தங்களுக்கான 15 நாள் தேவையை மட்டுமே இருப்பு வைக்க வேண்டும்.
குளிா்பான தயாரிப்பு நிறுவனங்கள், இனிப்பு வகைகள், கேக் தயாரிப்பு நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தும். செப்டம்பா் 1-ஆம் தேதிமுதல் நவம்பா் 30 வரை இந்த உத்தரவு அமலில் இருக்கும்’ என்று கூறியுள்ளாா்.
சில்லறை விற்பனையில் சா்க்கரை விலை ஓராண்டில் 13 சதவீதம் அளவுக்கு உயா்ந்து ஒரு கிலோ ரூ.52.30 என்ற அளவில் உச்சத்தில் உள்ளது. கரும்பாலை சா்க்கரை மொத்த விலையும் நடப்பு பருவத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 21, 2026, 9:37 pm
மோசடித் தளங்களை நீக்கும்படி Googleக்கு இந்திய அரசு உத்தரவு
August 20, 2026, 9:09 pm
சீன ஆக்கிரமிப்பு பற்றி ஒன்றிய அரசு விளக்கம் அளிக்காதது ஏன்?: காங்கிரஸ் தலைவர் கார்கே கேள்வி
August 19, 2026, 6:45 pm
அரசுப் பள்ளி உணவில் உப்புக்கு பதில் டிடர்ஜென்ட் பவுடர் கலந்ததால் 34 மாணவ, மாணவிகள் பாதிப்பு
August 18, 2026, 1:14 pm
பாஜக தேசிய மகளிா் அணி தலைவா் பதவியில் இருந்து வானதி சீனிவாசன் நீக்கம்
August 17, 2026, 4:43 pm
பிரதமர் மோடிக்காக 1,100 ராகிகளைத் தயாரித்த பிருந்தாவன் விதவைகள்
August 15, 2026, 1:12 pm
முன் அறிவிப்பின்றி விமானம் ரத்து: பெண் பயணி செய்த ரகளை இணையத்தில் வைரல்
August 15, 2026, 11:53 am
2047இல் இந்தியா வளர்ச்சி அடைந்த நாடாக உருமாறும்: செங்கோட்டையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உரை
August 14, 2026, 1:10 pm
