நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலோக் கடற்கரையில் சோகம்: விடுதியிலிருந்து வெளியேறிய மாணவர் மாயம்

குவாந்தான்:

பாலோக் கடற்கரையில் தனது நண்பர்களுடன் பொழுதுபோக்கிக் கொண்டிருந்த மாணவன் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த மாணவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடற்கரைக்குச் சென்றபோது இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாயமான மாணவர், பள்ளியின் விடுதியில் தங்கிப் பயின்று வந்தவர் என்பதும், பள்ளி நிர்வாகத்தின் அனுமதி அல்லது எவ்வித முன்னறிவிப்புமின்றி அவர் விடுதியிலிருந்து வெளியேறியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

விடுதி விதிமுறைகளை மீறி கடற்கரைக்குச் சென்றது இந்த அசம்பாவிதத்திற்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், காவல்துறையினர் அந்த மாணவரைக் கண்டுபிடிப்பதற்காகத் தீவிரமான தேடுதல் வேட்டையைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்துப் பெற்றோர்களும் கல்வி நிறுவனங்களும் மிகுந்த கவலையடைந்துள்ளனர். விடுதிகளில் தங்கியிருக்கும் மாணவர்கள், உரிய அனுமதியின்றி வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும், நீர்நிலைகளுக்குச் செல்லும்போது அதீத எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset