நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரஷ்யாவுடன் எண்ணெய் கொள்முதல் குறித்து பெட்ரோனாஸ் பேச்சுவார்த்தை நடத்தலாம்: பிரதமர்

கோத்தா பாரு:

ரஷ்யாவுடன் எண்ணெய் கொள்முதல் குறித்து பெட்ரோனாஸ் பேச்சுவார்த்தை நடத்தலாம்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை வலியுறுத்தினார்.

நாட்டின் எரிசக்தி இருப்பு மக்களின் பயன்பாட்டிற்குப் போதுமானதாக இருப்பதை உறுதி செய்வதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெட்ரோனாஸ் எண்ணெய் விநியோகக் கொள்முதல் தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடும்.

முன்னர் மாஸ்கோ மீது பல்வேறு தடைகளை விதித்திருந்த அமெரிக்காவைத் தவிர, பல ஐரோப்பிய நாடுகள் தற்போதைய பொருளாதாரத் தேவைகள் காரணமாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் விநியோகத்தைப் பெற மீண்டும் போட்டியிடுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம்.

ஏனென்றால் ரஷ்யாவுடனான நமது உறவு இன்னும் நன்றாக இருக்கிறது.

எனவே, தற்போதைய சூழ்நிலையிலும் கூட, பெட்ரோனாஸ் உட்பட எங்கள் குழுவினர், ஒரு நட்பு நாடாக எங்களின் சில தேவைகளைப் பூர்த்தி செய்ய ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.

இங்குள்ள சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தில் புதிய முனையத்தின் தொடக்க விழாவில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset