நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பேரா மாநிலத்தில் 200 மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது: டத்தோ சிவநேசன்

ஈப்போ:

பேரா மாநிலத்தில் கிட்டத்தட்ட 200 மருத்துவர்கள்  பற்றாக்குறை  நிலவுகிறது.

மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ சிவநேசன் இதனை கூறினார்.

தேசிய நிலையிலான தாதியர் சங்கத்திம் ஆண்டு கூட்டம் ஈப்போவில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை தொடக்கி வைத்து அவர் ஆற்றிய உரையில்,
நாட்டில் உள்ள அரசாங்க மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர்கள், தாதியர் பற்றாக்குறை தவிர்க்க இயலாது.

அதனை சரி செய்ய அரசாங்கம் உரிய நடவடிக்கையை எடுத்துக வருகிறது.

பேராவில் மட்டும் 200 மருத்துவர்கள்  பற்றாக் குறை  நிலவுகிறது. இதில் 50 விழுக்காடு நிபுணத்துவ மருத்துவர்கள் ஆவர்.

மருத்துவர்களுக்காக மத்திய அரசு குறிப்பாக பொது சேவை துறையிடம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என தாம் நம்புவதாக டத்தோ சிவநேசன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset