செய்திகள் மலேசியா
கோலாலம்பூர் சென்ட்ரல் டிஜிட்டல் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா; 144 மாணவர்கள் பட்டம் பெற்றனர்: அன்பா
கோலாலம்பூர்:
கோலாலம்பூர் சென்ட்ரல் டிஜிட்டல் கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.
இவ்விழாவில் 144 மாணவர்கள் பட்டம் பெற்றனர் என்று தலைமை இயக்குநர் அன்பானந்தன் கூறினார்.
கோலாலம்பூர் சென்ட்ரல் டிஜிட்டல் கல்லூரி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது.
தரமான கல்வியின் மூலம் மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்க வேண்டும் என்பது இக்கல்லூரியின் முதன்மை நோக்கமாகும்.
அதன் அடிப்படையில் கல்லூரியில் படிப்பை முடித்த மாணவர்களுக்கு இன்று பட்டம் வழங்கப்பட்டது.
இது தான் இக்கல்லூரியின் முதலாவது பட்டமளிப்பு விழாவாகும்.
லோஜிஸ்டிக், மேலாண்மை துறையில் ஆக அதிகமாக 82 மாணவர்கள் டிப்ளோமா பட்டம் பெற்றனர்.
வணிக நிர்வாக துறையில் 45 மாணவர்களும், மென்பொருள் பொறியியல் துறையில் 6 மாணவர்களும், தகவல் தொழில்நுட்ப துறையில் 5 மாணவர்களும், கணக்கியல் துறையில் 6 மாணவர்களும் டிப்ளோமா பட்டம் பெற்றனர்.
இம்மாணவர்கள் டிப்ளமோ கல்வியுடன் நிறுத்திக் கொள்ளாமல் இன்னும் உயர் கல்விகளை படிக்க வேண்டும்.
இதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என நாங்கள் ஊக்குவித்து வருவதாக பட்டமளிப்பு விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 18, 2026, 3:01 pm
பாலோக் கடற்கரையில் சோகம்: விடுதியிலிருந்து வெளியேறிய மாணவர் மாயம்
April 18, 2026, 2:45 pm
ரஷ்யாவுடன் எண்ணெய் கொள்முதல் குறித்து பெட்ரோனாஸ் பேச்சுவார்த்தை நடத்தலாம்: பிரதமர்
April 18, 2026, 2:42 pm
பேரா மாநிலத்தில் 200 மருத்துவர்கள் பற்றாக்குறை நிலவுகிறது: டத்தோ சிவநேசன்
April 18, 2026, 2:41 pm
மஇகா இன்னும் தேசிய முன்னணி கூட்டணியின் உறுப்புக் கட்சியாகவே நீடிக்கிறது: அஹ்மத் ஜாஹித்
April 18, 2026, 12:15 pm
உள்ளாடைகளைத் திருடிச் சென்ற மர்ம நபருக்கு போலிஸ் வலைவீச்சு
April 18, 2026, 12:08 pm
“85% மக்களுக்குப் பாதிப்பில்லை”: டீசல் விலை உயர்வு குறித்துப் பிரதமர் அன்வாரின் விளக்கம்
April 18, 2026, 11:56 am
புனிதப் பயணம் தொடக்கம்: மலேசிய ஹஜ் பயணிகளுக்குப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் நெகிழ்ச்சியான வாழ்த்து
April 18, 2026, 10:47 am
