நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அம்பாங் கேலக்ஸி பேரங்காடியில் சோழா விற்பனை சந்தை; இந்திய சிறு தொழில் வணிகர்களுக்கு மகத்தான வாய்ப்பு: மோகன் ராஜ்

அம்பாங்:

அம்பாங் கேலக்ஸி பேரங்காடியில் சோழா விற்பனை சந்தை நடைபெறவுள்ளது.

இந்த சந்தை  இந்திய சிறு தொழில் வணிகர்களுக்கு மகத்தான வாய்ப்பு அமையும் என்று அதன் ஒருங்கிணைப்பாளர் மோகன் ராஜ் கூறினார்.

அம்பாங்லில் கேலக்ஸி பேரங்காடி அனைவருக்கு அறிந்த தெரிந்த ஒரு வர்த்தக மையமாகும்.

இந்த பேரங்காடியில் முதல் முறையாக சோழா ஸ்ட்ரீட்ஸ் என்று விற்பனை சந்தை அமைக்கப்படவுள்ளது.

வரும் ஏப்ரல் 30 முதல் மே 3ஆம் தேதி வரை இச்சந்தை இங்கு நடைபெறவுள்ளது.

கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகள் இங்கு அமைக்கப்படவுள்ளது.

மிகவும் குறைந்த கட்டணத்தில் உள்ளூர் சிறு, நடுத்தர வணிகர்களுக்கு இங்கு வியபாரம் செய்ய வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளது.

அதே வேளையில் இங்கு நிகழ்ச்சிகள் நடற்றுவதற்கு மேடையும் உள்ளது.

அதில் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு முதல் கட்டமாக இலவசமாக வாய்ப்புகள் வழங்கப்படும்.

ஆக இருந்த வாய்ப்புகள் நமது இந்தியர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மோகன் ராஜ் கேட்டு கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset