நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு வழக்கறிஞர் அலுவலகத்தில் நிகழ்ந்த  தீ விபத்தில் மூத்த வழக்கறிஞர் டத்தோ சான் மார்க்கன் உட்பட இருவர் மரணம்

கோலாலம்பூர்:

வழக்கறிஞர் அலுவலகத்தில் நிகழ்ந்த தீ விபத்தில் மூத்த வழக்கறிஞர் டத்தோ சான் மார்க்கன் உட்பட இருவர் மரணமடைந்தனர்.

இங்குள்ள கிங் தெருவில் உள்ள ஒரு வழக்கறிஞர் அலுவலகத்தில்  தீ விபத்து ஏற்பட்டது.

உயிரிழந்த இருவரில், புகழ்பெற்ற மூத்த வழக்கறிஞர் டத்தோ சான் மார்க்கனும் ஒருவர்.

சமீபத்தில் தனது 88ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய சான் மார்க்கன், சில சட்டரீதியான பணிகளை முடிப்பதற்காக அந்த அலுவலகத்தில் இருந்தார்.

உயிரிழந்த மற்றொருவரான 60 வயதான சந்திரா பின்வானி ஜிவத்ராம் அந்த அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தார்.

பிற்பகல் 1.05 மணிக்கு சான் மார்க்கன் ஒரு ஜன்னலுக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

சந்திரா பின்னர் பிற்பகல் 3.26 மணிக்கு, சுவரருகே கோப்புகளின் குவியலுக்கு அடியில் கண்டெடுக்கப்பட்டார் என்று பினாங்கு தீயணைப்பு, மீட்புத் துறை இயக்குநர் முகமது ஷோகி ஹம்சா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset