நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மக்களின் குரல்களும் கருத்துகளும் மாநிலத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்: ரவீன்குமார்

ஜொகூர்பாரு:

மக்களின் குரல்களும் கருத்துகளும் மாநில வளர்ச்சிக்கு வித்திடும் என்று ஜொகூர் ஆட்சிக் குழு உறுப்பினர் ரவீன்குமார் கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

நல்லெண்ணம்,  வெளிப்படைத்தன்மை நிறைந்த சூழலில் நடைபெற்ற ஜொகூர் அர்ச்சகர் சங்கத்தின் உறுப்பினர்களுடனான ஒரு கலந்துரையாடலில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

யாயாசான் சுல்தானா ரோகயாவின் தலைவர் டத்தோ ஆர். சுகுமாரன் இதில் கலந்து கொண்டார்.

மேலும் சுமார் 30 உறுப்பினர்களின் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

உறவுகளை வலுப்படுத்துவதிலும் பொது நன்மைக்காகக் கருத்துக்களைப் பங்களிப்பதிலும் இந்தச் சமூகத்தின் உயர் அர்ப்பணிப்பை இக்கூட்டம் பிரதிபலிக்கிறது.

குறிப்பாக சமூகத்தின் பல்வேறு பிரச்சினைகள், ஆலோசனைகள், நம்பிக்கைகளை நேரடியாக முன்னிலைப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்கின.

தலைமைக்கும் சமூகத்திற்கும் இடையே ஒரு பாலமாக இது போன்ற அமர்வுகளை நான் மிகவும் முக்கியமானதாகக் கருதுகிறேன்.

இதன் மூலம் ஒவ்வொருவரின் குரலும் கேட்கப்பட்டு இன்னும் நெருக்கமாகப் புரிந்து கொள்ளப்படும்.

அதே நேரத்தில், மாநில மந்திரி புசார் டத்தோ ஒன் ஹபிஸ் காஸி தலைமையில், மாநிலத்தின் வளர்ச்சியை மக்கள் முழுமையாக உணர்வதை உறுதி செய்வதில் ஜொகூர் மாநில அரசின் தொடர்ச்சியான முயற்சிகளையும் நான் பகிர்ந்து கொள்கிறேன்.

சமூக சமநிலையை வலியுறுத்தும் இந்த அணுகுமுறையே, மேலும் ஒன்றுபட்ட, நல்லிணக்கமான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கான அடிப்படையாகும்.

இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய முன்வந்த சங்கத்திற்கும், கருத்துக்களை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டதற்கும் அவர் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset