நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் மாணவர்களின் வீழ்ச்சியை கல்வியமைச்சு ஆராய வேண்டும்: டத்தோ சரவணக்குமார்

நீலாய்:

எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் மாணவர்கள் கண்டுள்ள வீழ்ச்சியை  கல்வியமைச்சு ஆராய வேண்டும்.

நெகிரி செம்பிலான் பெர்சத்து சயாப் பிரிவின் தலைவர் டத்தோ வீ. சரவணக்குமார் இதனை வலியுறுத்தினார்.

கடந்த 2025ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் அண்மையில் வெளியாகின.

இந்த தேர்வில் அதிகமான மாணவர்கள் 10 ஏ எடுத்து சாதனைபடைத்துள்ளனர். இவ்வேளையில் அம்மாணவர்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் எஸ்பிஎம் தேர்வில் 10 ஏ எடுத்த அனைத்து மாணவர்களுக்கு மெட்ரிகுலேசன் வாய்ப்பு வழங்கப்படும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

கல்வியமைச்சின் இந்த அறிவிப்பை நான் வரவேற்கிறேன்.

ஆனால் இவ்வாண்டு வெளியான எஸ்பிஎம் தேர்வில் அதிகமான மாணவர்கள் நன்னெறி பாடத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

10 பாடங்களில் மலாய், ஆங்கிலம், அறிவியல், கணிதம் என அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் ஏ எடுத்துள்ளனர்.

ஆனால் நன்னெறி பாடத்தில் மட்டும் அவர்களால் ஏ எடுக்க முடியவில்லை. இதனால் அவர்களின் மெட்ரிகுலேசன் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

இவ்விவகாரம் பல கேள்விகளையும் சந்தேகங்களையும் எழுப்புகிறது.

ஆகையால் கல்வியமைச்சு இவ்விவகாரத்தை ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என டத்தோ சரவணக்குமார் கேட்டு கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset