நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண்ணைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவர் கைது: போலிஸ்

கோலாலம்பூர்:

பெண்ணைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவர் போலிசார் கைது செய்துள்ளனர்.

சிப்பாங் மாவட்ட போலிஸ் தலைவர் நோர் ஹிசாம் பஹாமான் இதனை கூறினார்.

பண்டார் சன்சூரியாவில் பாதிக்கப்பட்டவரின் இல்லத்தில் நடந்த ஒரு சம்பவத்தில், கூர்மையான ஆயுதத்தால் ஒரு பெண்ணைக் குத்தியதாக சந்தேகிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

குறிப்பாக இந்த வழக்கு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 22 வயதான சந்தேக நபர் சம்பவம் நடந்த அன்றே கைது செய்யப்பட்டார்.

இந்தச் சம்பவத்தில் 34 வயதான பாதிக்கப்பட்ட பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

அவரது நிலைமை சீராக உள்ளது. மேலும் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இருவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சந்தேக நபர் அந்தக் குடியிருப்புப் பகுதியில் சமீபத்தில் ஒரு ஏர் பிஎன்பி அறையை வாடகைக்கு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset