நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கைதி தப்பியோட்டம்; எல்லை வாயில்களில் போலிஸ் சோதனைகளை பலப்படுத்தியுள்ளது

சுங்கைபூலோ:

கடந்த வியாழக்கிழமை சுங்கை பூலோ சிறையிலிருந்து தப்பிய பாகிஸ்தானிய விசாரணைக் கைதியைக் கண்டுபிடிப்பதற்காக, நாட்டின் அனைத்து எல்லை வாயில்களில் போலிஸ் சோதனைகளை பலப்படுத்தியுள்ளது.

சந்தேக நபரான 24 வயது முகமது ஹசன் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காகவே இந்த பலப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் என்று சுங்கை பூலோ போலிஸ் தலைவர் முகமது ஹபீஸ் முகமது நூர் கூறினார்.

சந்தேக நபரைத் தேடிக் கைது செய்யும் நடவடிக்கை தற்போது பொது நடவடிக்கைப் படை, விமானப் படைத் தளம்,  உள் பாதுகாப்பு,  பொது ஒழுங்குத் துறை ஆகியவற்றின் உதவியுடன் பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் பாதுகாப்பு தொடர்ந்து பேணப்படும் என்று காவல்துறை உறுதியளித்துள்ளது.

இருப்பினும், பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.  செய்யப்படும் அனைத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அவர் கூறினார்.

முன்னதாக ஷாஆலம் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணை நடவடிக்கைகளில் கலந்துகொண்ட பிறகு, சந்தேக நபர் மாலை 6 மணிக்கு சுங்கை பூலோ சிறைச்சாலை அணிவகுப்பு மைதானத்தில் போலிஸ் காவலில் இருந்து தப்பிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset