செய்திகள் மலேசியா
14 மணி நேரம் இடைவிடாது கணிதப் பாடத்தை போதித்து ஆசிரியர் ஹனஹான் ஆசியான் விருது வென்றார்
ஷாஆலம்:
மலேசியாவில் புகழ்பெற்ற கணித ஆசிரியர்களில் ஒருவரான ஜனஹான் ஆறுமுகம் ஒரே நேரத்தில் இரட்டை விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
Pusat Tusyen Arena Matriks மையத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் ஜனஹான் ஆறுமுகத்திற்கு நேற்று நடைபெற்ற விழாவில் இரண்டு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி ஆன்லைன் மூலமாக 1,200 மாணவர்களுக்கு 14 மணி நேரம் 30 நிமிடங்கள் இடைவிடாது கணிதம் பாடத்தை போதித்து தந்தார் ஆசிரியர் ஜனஹான்.
கணிதம் அமர்வில் தொடர்ச்சியாக அதிகமாக மாணவர்கள் பங்கேற்பாளர்கள் என்ற சாதனையை ஆசியான் நாடுகளில் இவர் ஏற்படுத்தினார்.
இந்த சாதனைக்காக அவருக்கு ஆசியான் சாதனையாளர் விருதை Asian Record's நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Eldrick Koh வழங்கி சிறப்பித்தார்.
மேலும் இந்த நிறுவனத்தின் சார்பில் இளம் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இவருக்கு ஒரு நேரத்தில் இரண்டு சாதனையாளர் விருது வழங்கப்பட்ட போது மாணவர்கள் பெரும் உற்சாகத்தில் திளைத்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 12, 2026, 12:18 pm
சமூக வலைதள நேரலையில் நேர்ந்த விபரீதம்: காரில் இருந்த பெண் மீது தாக்குதல்
April 12, 2026, 11:57 am
சுபாங்கில் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த பெண்; மனநல பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதி
April 12, 2026, 11:42 am
தேசிய கோவில் கருத்தரங்கு மகத்தான வெற்றியுடன் இலக்கையும் அடைந்தது: டத்தோ சிவக்குமார்
April 12, 2026, 11:34 am
மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து: பன்றிப் பண்ணைக் கழிவுகளால் சிலாங்கூர் ஆறுகள் மாசு
April 12, 2026, 10:52 am
பெண்ணைக் கத்தியால் குத்தியதாக சந்தேகிக்கப்படும் தனியார் பல்கலைக்கழக மாணவர் கைது: போலிஸ்
April 12, 2026, 10:51 am
கைதி தப்பியோட்டம்; எல்லை வாயில்களில் போலிஸ் சோதனைகளை பலப்படுத்தியுள்ளது
April 12, 2026, 10:23 am
