செய்திகள் மலேசியா
14 மணி நேரம் இடைவிடாது கணிதப் பாடத்தை போதித்து ஆசிரியர் ஹனஹான் ஆசியான் விருது வென்றார்
ஷாஆலம்:
மலேசியாவில் புகழ்பெற்ற கணித ஆசிரியர்களில் ஒருவரான ஜனஹான் ஆறுமுகம் ஒரே நேரத்தில் இரட்டை விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளார்.
Pusat Tusyen Arena Matriks மையத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் ஜனஹான் ஆறுமுகத்திற்கு நேற்று நடைபெற்ற விழாவில் இரண்டு விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி ஆன்லைன் மூலமாக 1,200 மாணவர்களுக்கு 14 மணி நேரம் 30 நிமிடங்கள் இடைவிடாது கணிதம் பாடத்தை போதித்து தந்தார் ஆசிரியர் ஜனஹான்.
கணிதம் அமர்வில் தொடர்ச்சியாக அதிகமாக மாணவர்கள் பங்கேற்பாளர்கள் என்ற சாதனையை ஆசியான் நாடுகளில் இவர் ஏற்படுத்தினார்.
இந்த சாதனைக்காக அவருக்கு ஆசியான் சாதனையாளர் விருதை Asian Record's நிறுவனத்தின் தலைமை இயக்குநர் Eldrick Koh வழங்கி சிறப்பித்தார்.
மேலும் இந்த நிறுவனத்தின் சார்பில் இளம் சாதனையாளர் விருதும் இவருக்கு வழங்கப்பட்டது.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் இவருக்கு ஒரு நேரத்தில் இரண்டு சாதனையாளர் விருது வழங்கப்பட்ட போது மாணவர்கள் பெரும் உற்சாகத்தில் திளைத்தனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 7, 2026, 10:36 pm
இஸ்மாயில் சப்ரிக்கு பேஸ்மேக்கர் பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவு பெற்றது
August 7, 2026, 10:35 pm
சமமான கல்வியை ஒரு தேசிய செயல் திட்டமாக மாற்ற வேண்டும்: ஸ்ரீ முருகன் கல்வி நிலையம் வலியுறுத்துகிறது
August 7, 2026, 5:23 pm
போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கேஎல்ஐஏவில் போலிஸ் பாதுகாப்பை பலப்படுத்தும்: ஹுசைன் ஒமார் கான்
August 7, 2026, 5:22 pm
கெஅடிலான் துணைத் தலைவர் பதவியிலிருந்து நூருல் இசா விலகியதை டத்தோஶ்ரீ அன்வார் வரவேற்றார்
August 7, 2026, 5:19 pm
இஸ்மாயில் சப்ரி கீழே விழுந்த இரண்டு விநாடிகளில் அவரது இதயம் நின்றுவிட்டது: வழக்கறிஞர்
August 7, 2026, 5:18 pm
இரண்டாவது சிலாங்கூர் திட்டம்: 5 முக்கியத் துறைகள் மூலம் மாநிலப் பொருளாதாரத்தை உயர்த்த இலக்கு
August 7, 2026, 4:08 pm
