நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜாலான் மஸ்ஜித் இந்தியா புதிய தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் கட்டுமான பணிகளுக்கு உறுதுணையாக இருப்பேன்: கோபிந்த் சிங்

கோலாலம்பூர்:

ஜாலான் மஸ்ஜித் இந்தியா புதிய தேவிஶ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் கட்டுமான பணிகளுக்கு உறுதுணையாக இருப்பேன்.

இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இதனை கூறினார்.

புதிய தேவி ஸ்ரீ பத்திர காளியம்மன் கோயில் வளாகத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில்கலந்து கொண்டேன்.

இந்திய சமூகத்திற்கு ஒரு முக்கிய உந்து சக்தியாக அமையவிருக்கும் ஒரு வழிபாட்டுத் தலத்தின் உருவாக்கத்திற்கு இந்த விழா ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது.

இந்த உன்னதமான,  அர்த்தமுள்ள விழா, ஒரு வழிபாட்டுத் தலமாக மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் உள்ளூர் இந்திய சமூகத்திற்கு ஒரு உந்து சக்தியாகவும் திகழவிருக்கும் ஒரு கோயிலின் புதிய தொடக்கத்தைக் குறிக்கிறது.

இந்த ஆலயத்தின் அனைத்து கட்டுமானப் பணிகளும் சுமுகமாக நடைபெறும் என்று நம்புகிறேன்.

மேலும் இந்த உன்னதமான முயற்சியை வெற்றிபெறச் செய்வதற்கு எனது ஆதரவை வழங்குவதில் நான் தொடர்ந்து உறுதியாக இருப்பேன் என்று அவர் நேற்று இரவு சமூக ஊடகத்தில் பதிவிட்டிருந்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset