நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன

கோலாலம்பூர்: 

டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம், மலேசியாவின் ஏழு கப்பல்களில் ஆறு ஏற்கனவே ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து, மூல எண்ணெய் விநியோகத்தை இந்த நாட்டிற்குக் கொண்டு வரும் பயணத்தில் இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

அந்த விநியோகத்தைக் கொண்டு சென்ற மற்றொரு கப்பல், சேதம் காரணமாக ஒரு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் கூறினார்.

அந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து, இந்த மாதம், மே மாதத்திற்கான எண்ணெய் விநியோகம் கட்டுக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

"பெட்ரோனாஸ் குழுமத்தின் தலைவர், தலைமை நிர்வாக அதிகாரியுமான டான் ஸ்ரீ தெங்கு முஹம்மத் தௌஃபிக் சற்று முன் எங்கள் கப்பல்களின் பயணத்தின் வசதி, போக்குவரத்து குறித்த முன்னேற்றத்தை எனக்குத் தெரிவித்தார்.

"அல்ஹம்துலில்லா, அனைத்தும் கடந்துவிட்டன... ஒன்று ஏறக்குறைய வந்துவிட்டது, ஒன்று புறப்பட்டுவிட்டது. எங்கள் ஒரு கப்பல் மட்டும் சேதமடைந்து துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆறு பயணத்தில் உள்ளன.

"ஏப்ரல், மே மாதங்களுக்கான எண்ணெய் விநியோகம் இன்னும் மிகவும் கட்டுக்குள் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று இங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset