நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்

மலாக்கா: 

கடந்த வாரம் ஒரு நாற்காலியைப் பயன்படுத்தி தனது மனைவியை காயப்படுத்திய குற்றத்திற்காக, வேலையில்லாத ஒருவருக்கு இன்று ஐர் கெரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ரிம3,500 அபராதம் விதித்தது.

48 வயதுடைய முஹம்மத் ஹைரி மஜித் மீதான குற்றச்சாட்டில் அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மாஜிஸ்திரேட் நூர் அஃபிகா ராதியா ஜைனுரின் இந்தத் தண்டனையை விதித்தார்.

குற்றச்சாட்டின்படி, 41 வயதுடைய தனது மனைவி இலி தயானா சுதிர்மானை, ஒரு பிளாஸ்டிக் நாற்காலியால் அடித்து, வேண்டுமென்றே காயப்படுத்தியதாக முஹம்மத் ஹைரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி, மதியம் 2 மணியளவில், இங்குள்ள தாமான் பெங்காலான் மின்யாக் டாமாய், ஜாலான் PMD 1, எண் 23-ல் உள்ள ஒரு வீட்டில் இந்தக் குற்றம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்தக் குற்றத்திற்காக, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324-ன் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம், பிரம்படி அல்லது அந்தத் தண்டனைகளில் ஏதேனும் இரண்டும் விதிக்கப்படலாம்.

துணை வழக்குத் தொடரும் அதிகாரி சித்தி நூர் ஆலியா சஃப்ரி தலைமையில் வழக்குத் தொடர்பு மேற்கொள்ளப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்டவர் வழக்கறிஞர் எவராலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை.

இரண்டு குழந்தைகளின் தந்தையுமான குற்றஞ்சாட்டப்பட்டவர், இது தனது முதல் குற்றம் என்றும், தான் வருந்துவதாகவும் கூறி, குறைந்த தண்டனையை விதிக்குமாறு முறையீடு செய்தார்.

நீதிமன்றம் ரிம3,500 அபராதத்தையும், அபராதம் செலுத்தத் தவறினால் மூன்று மாத சிறைத்தண்டனையையும் விதித்தது.

-சங்கீர்த்தனா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset