நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சியோனிச பயங்கரவாதத் தாக்குதல்களால்  ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் கமால் கராஸி அகால மரணம் அடைந்தார் என்ற செய்தி துயரமானது: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 

புத்ரா ஜெயா:

சியோனிச பயங்கரவாதத் தாக்குதல்களால் ஏற்பட்ட காயங்களின் காரணமாக, ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் கமால் கராஸி அகால மரணம் அடைந்தார் என்பதை அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் ஈரானின் தூதராக அவர் பணியாற்றிய காலத்தில் நான் முதன்முதலில் டாக்டர் கராஸியை அறிந்துகொண்டேன். வெளியுறவுத்துறை அமைச்சராக அவர் ஆற்றிய சிறப்பான பணி நினைவுகூரத்தக்கது. அவரது பதவிக்காலம் முழுவதும் எங்கள் நட்பு தொடர்ந்தது. அவர் அபூர்வமான அறிவும் உண்மையான அன்பும் கொண்ட மனிதர்: எப்போதும் சிந்தனைமிக்கவர், கண்ணியமானவர்.

உலகம் ஒரு மிகச்சிறந்த தூதரை இழந்துள்ளது, நான் ஒரு அருமை நண்பரை இழந்துள்ளேன். 

அவரது குடும்பத்தினருக்கும் ஈரான் மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். அவரது மறைவு, இந்த மோதலின் பயங்கரமான விலையை அவரது மரணம் நினைவூட்டுகிறது. இந்தப் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன் என்று பிரதமர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார். 

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset