நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தொடரும் எல்.ஆர்.டி சீரமைப்புப் பணிகள்: பயணிகளின் வசதிக்காக மாற்று இரயில் சேவை அறிவிப்பு

கோலாலம்பூர்: 

சான் சோவ் லின் (Chan Sow Lin) இரயில் நிலையத்தில் ஏற்பட்டுள்ள தண்டவாள இணைப்பு கோளாறு காரணமாக, அம்பாங், ஸ்ரீ பெட்டாலிங் இடையிலான எல்.ஆர்.டி (LRT) வழித்தடத்தில் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இப் பணிகள் முடியும் வரை பயணிகளின் வசதிக்காக மாற்று இரயில் சேவைகள் வழங்கப்படும் என ராபிட் ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய மாற்றங்களின்படி, அம்பாங் நிலையத்திலிருந்து வரும் இரயில்கள் சான் சோவ் லின் நிலையத்துடன் தனது பயணத்தை முடித்துக்கொண்டு மீண்டும் திரும்பிச் செல்லும். 

இதற்கான இரயில் வருகை இடைவெளி 6 நிமிடங்களாகக் கணிக்கப்பட்டுள்ளது. அம்பாங் நோக்கிச் செல்பவர்கள், அம்பாங்கிலிருந்து செந்தூல் தீமூர் நோக்கிச் செல்பவர்கள் சான் சோவ் லின் நிலையத்தின் குறிப்பிட்ட தளங்களில் இரயில் மாறிச் செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

அதேவேளையில், செந்தூல் தீமூர் முதல் புத்ரா ஹைட்ஸ் வரையிலான இரயில் சேவைகள் எவ்வித மாற்றமுமின்றி வழக்கம் போல் இயங்கும்.

முன்னதாக, அவான் பெசார், ஸ்ரீ பெட்டாலிங் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட மின் விநியோகத் தடையால் இரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டது. இதனைச் சரிசெய்யும் பொருட்டு, மாற்று இரயில்களுடன் இலவச பேருந்து சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளுக்கு வழிகாட்டவும் உதவிகள் புரியவும் பாதிக்கப்பட்ட நிலையங்களில் கூடுதல் பணியாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

பயணிகள் தங்களின் பயணத்தைத் தடையின்றி மேற்கொள்ள ஏதுவாக, ராபிட் கே.எல் (Rapid KL) சமூக ஊடகப் பக்கங்கள் அல்லது 'மை-ராபிட் பல்ஸ்' (MyRapid PULSE) செயலி வாயிலாக அவ்வப்போது வெளியாகும் உடனுக்குடனான தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

-கிரித்திக்கா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset