செய்திகள் மலேசியா
மக்களை நன்றியுடன் இருக்குமாறு கேட்பதை விடுத்து, பிரதமர் எரிசக்தி நெருக்கடியைச் சமாளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்: டோமினிக்
கோலாலம்பூர்:
உலகளாவிய எரிசக்தி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதையோ அல்லது நன்றியுடன் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் கூறி மக்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடாது.
அதை விடுத்து மக்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கவனம் செலுத்த வேண்டும் என்று கெராக்கான் கட்சியின் தலைவர் டத்தோ டாக்டர் டோமினிக் லாவ் வலியுறுத்தினார்.
மக்கள் நன்றியுடன் இருக்குமாறு அழைப்பு விடுக்கத் தேவையில்லை.
மாறாக, செயல்திறன், முடிவுகள், நிர்வாகத்தில் உள்ள நேர்மை ஆகியவற்றின் மூலம், அரசாங்கம் உண்மையிலேயே பாராட்டப்படுவதற்குத் தகுதியானது என்பதை நிரூபிக்க வேண்டும்.
விலை உயர்வுகளை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி, பொதுச் சேவைகளை மேம்படுத்தி, ஊழலை எதிர்த்துப் போராடி, பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் ஒரு அரசாங்கம், கேட்காமலேயே மக்களின் பாராட்டை இயல்பாகப் பெறும்.
இருப்பினும், இந்த அடிப்படை விஷயங்கள் செயல்படுத்தப்படத் தவறினால், மக்கள் நன்றியுடன் இருக்க வேண்டும் என்ற அழைப்பு, நிர்வாகத்தின் பலவீனங்களை மூடிமறைக்கும் ஒரு முயற்சியாகவே பார்க்கப்படும்.
செயல்திறனற்ற கொள்கைகளின் விளைவுகளைச் சுமப்பவர்களும், பணவீக்கத்தின் விலையைக் கொடுப்பவர்களும், வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டாலும் தொடர்ந்து நம்பிக்கை வைப்பவர்களும் மக்கள்தான் என்பதால், அரசாங்கம் முதலில் அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 10, 2026, 11:20 pm
ரபிசி குறித்து கருத்து தெரிவிக்க மறுப்பு; பொருளாதாரத்திற்கே அதிக முன்னுரிமை: பிரதமர்
April 10, 2026, 11:19 pm
எஸ்பிஎம் தேர்வின் நன்னெறி பாடத்தில் ஏ எடுப்பது அவ்வளவு சிரமமா?: டத்தோ நெல்சன் கேள்வி
April 10, 2026, 11:17 pm
தெலுக் இந்தானில் சித்ரா பௌர்ணமி திருவிழா; தற்காலிக வணிகக் கூடாரங்கள் இடம் மாற்றம் காணாது: சிவநேசன்
April 10, 2026, 11:16 pm
80ஆம் ஆண்டு நிறைவு விழா; மஇகாவின் அடையாளத்தையும் சாதனையையும் பறைசாற்றும்: டத்தோ முருகையா
April 10, 2026, 3:43 pm
நாற்காலியால் மனைவியை அடித்த வேலையில்லாதவருக்கு RM3,500 அபராதம்
April 10, 2026, 3:33 pm
மலேசியாவின் 6 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்துவிட்டன
April 10, 2026, 3:32 pm
பற்றி எரிந்த அடுக்குமாடி வீடு: 60 வயது முதியவர் உடல் கருகிய நிலையில் மீட்பு
April 10, 2026, 3:23 pm
பெலூரானில் 157 மாணவர்கள் தவிப்பு: வெயிலிலும் மழையிலும் கூடாரத்தின் கீழ் கல்வி பயிலும் அவலம்
April 10, 2026, 12:55 pm
