செய்திகள் உலகம்
லெபனானில் இஸ்ரேல் நடத்திய கொடூரமான தாக்குதல்: 182 பேர் பலி
பெய்ரூட்:
லெபனான் தலைநகரான பெய்ரூட் மீது இஸ்ரேல் நடத்திய மிகக் கடுமையான வான்வழித் தாக்குதலில், ஒரே நாளில் 182 பேர் பலியாகி உள்ளனர். 890-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்கா, ஈரான் இடையே எட்டப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கை லெபனானுக்குப் பொருந்தாது என இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்த நிலையில், இந்தத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
நேற்று மாலை எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், பெய்ரூட்டின் முக்கிய குடியிருப்புப் பகுதிகள் நிலைகுலைந்தன. வானளாவிய கட்டிடங்கள் நொடிப்பொழுதில் இடிந்து தரைமட்டமானதில் அப்பகுதியே கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
இந்த கோரத் தாக்குதலில் செய்தி சேகரிக்கச் சென்ற சுசான் கலீல், காதா தாயெக் ஆகிய இரண்டு ஊடகவியலாளர்களும் உயிரிழந்தது ஊடகத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிஸ்புல்லா அமைப்பினரை முழுமையாக ஒடுக்கும் நோக்கில், கடந்த 2024-ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவென இஸ்ரேல் பாதுகாப்புத் துறை பெருமிதம் தெரிவித்துள்ளது.
சர்வதேச நாடுகளின் அமைதிப் பேச்சுவார்த்தைகளைப் புறந்தள்ளி, லெபனான் மீதான தாக்குதல் தொடரும் எனப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
இஸ்ரேலின் இந்தத் தொடர் அத்துமீறல்கள் லெபனானை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்வதாக அந்நாட்டு அதிபர் ஜோசப் அவ்ன் வேதனை தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் இந்த போர்ச் சூழலை முடிவுக்குக் கொண்டு வர பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி உள்ளிட்ட தலைவர்கள் அவசர அழைப்பு விடுத்துள்ளனர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 9, 2026, 6:04 pm
இஸ்ரேலிய தாக்குதலில் லெபனானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203 ஆக அதிகரித்துள்ளது
April 9, 2026, 12:14 pm
ஈரானுக்கு ஆயுதங்கள் வழங்கும் நாடுகள் மீது 50 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்
April 9, 2026, 10:58 am
