நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இன வேறுபாடின்றி எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்ற 6,717 மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு வழங்கப்படும்: கல்வியமைச்சு

புத்ராஜெயா:

இன வேறுபாடின்றி எஸ்பிஎம் தேர்வில் 10ஏ பெற்ற 6,717 மாணவர்களுக்கு மெட்ரிகுலேஷன் வாய்ப்பு வழங்கப்படும்.

கல்வியமைச்சு ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை உறுதிப்படுத்தியது.

2025ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வில் 10ஏ, அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற 6,717 மாணவர்கள் அனைவருக்கும் மெட்ரிகுலேஷன் இட வாய்ப்பு வழங்கப்பட்டது.

2025 எஸ்பிஎம் தேர்வில் 10ஏ,  அதற்கு மேற்பட்ட மதிப்பெண்களைப் பெற்ற 6,717 மாணவர்கள் அனைவருக்கும் 2026/2027 கல்வி அமர்விற்கான மெட்ரிகுலேஷன் திட்டத்தில் கல்வியமைச்சு வாய்ப்பளிக்கும்.

இனம் மற்றும் பின்னணியைப் பொருட்படுத்தாமல், மெட்ரிகுலேஷன் திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்தத் தானியங்கி வாய்ப்பு வழங்கப்படுகிறது என்று அந்த  அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், இத்திட்டத்திற்கான 90 சதவீத பூமிபுத்ரா சேர்க்கை ஒதுக்கீடு அப்படியே உள்ளது.

அது பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-  பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset