செய்திகள் மலேசியா
எல்லைகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் போலிசாரை பணியமர்த்துவது குறித்து அமைச்சரவை பரிசீலித்து வருகிறது: ஃபஹ்மி
புத்ராஜெயா:
நாட்டின் எல்லைகளுக்கு அருகிலுள்ள பெட்ரோல் நிலையங்களில் போலிசாரை பணியமர்த்துவது குறித்து அமைச்சரவை பரிசீலித்து வருகிறது.
மடானி அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
எல்லைப் பகுதிகளில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பல கைதுகள் மேற்கொள்ளப்பட்டது குறித்து உள்நாட்டு வர்த்தகம், வாழ்க்கைச் செலவின அமைச்சிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த விவாதம் நடைபெற்றது.
குறிப்பாக நாட்டின் எல்லைப்புறங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் மேற்கொள்ளப்பட்ட கைதுகளின் விளைவாக, பாதுகாப்பு தொடர்பான பல அம்சங்களை மேம்படுத்த வேண்டியுள்ளது.
எல்லைப்புறங்களில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் பாதுகாப்பு மேம்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, பாதுகாப்புப் பணியாளர்கள், குறிப்பாக போலிஸ் அதிகாரிகளின் இருப்புக்கான தேவையை அமைச்சரவை பரிசீலித்து வருகிறது.
இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம், உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்த தினசரி செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.
மேலும், மத்திய, மாநில அளவில் பேரிடர் மேலாண்மையை வலுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக, தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவை அமைக்க அமைச்சரவை இன்று முடிவு செய்துள்ளதாக ஃபஹ்மி தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 8, 2026, 5:10 pm
சுங்கைப்பட்டாணியில் பரபரப்பு: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஷாபு போதைப்பொருள் பறிமுதல்
April 8, 2026, 4:55 pm
கோவிலில் மரக்கட்டை விழுந்ததில் இளம் பெண் உயிரிழந்தார்
April 8, 2026, 4:53 pm
ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைக்க 300 உதவி வார்டன்கள் நியமனம்: ஃபட்லினா
April 8, 2026, 4:51 pm
அமெரிக்கா, ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை வரவேற்கத்தக்கது: பிரதமர்
April 8, 2026, 4:13 pm
