நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சட்டத்தைப் பின்பற்றத் தவறும் பிள்ளைகள் பராமரிப்பு மையங்களுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்: டத்தோ சிவக்குமார்

கோலாலம்பூர்:

சட்டத்தைப் பின்பற்றத் தவறும் பிள்ளைகள் பராமரிப்பு மையங்களுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மஹிமா தலைவரும் டிஎஸ்கே சமூக நல அமைப்பின் தலைவருமான டத்தோ ந. சிவக்குமார் இதனை வலியுறுத்தினார்.

சட்டத்தைப் பின்பற்றத் தவறி, அங்கு வசிப்பவர்களின் பாதுகாப்பைப் புறக்கணிக்கும் எந்தவொரு குழந்தைகள் பராமரிப்பு மையத்தின் மீது உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அலட்சியமாகவோ அல்லது பொறுப்பற்ற முறையிலோ செயல்படும்  பராமரிப்பு மையங்களின் இருப்பு என்பது சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத ஒரு தீவிரமான விஷயம்.

இங்குள்ள பத்து கேவ்ஸில் உள்ள ஒரு குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் நடந்த சம்பவம், கண்காணிப்பு, அமலாக்கத்தில் உள்ள பலவீனங்களைத் தெளிவாகக் காட்டுகிறது.

இதை அதிகாரிகள் உடனடியாகக் கவனிக்க வேண்டும்.

ஊடக அறிக்கைகளின் அடிப்படையில், அந்த மையத்தின் பராமரிப்பில் இருந்தபோது ஒரு குழந்தை தொடர்ச்சியான பாலியல் துன்புறுத்தலுக்கும், உடல்ரீதியான கொடுமைக்கும் ஆளானதாக நம்பப்படுகிறது.

இந்த விவகாரம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இது குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் பாதுகாப்பின் கொடூரமான மீறலாகும்.

ஆக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் அவர்களின் பதவி எதுவாக இருந்தாலும் நீதியின் முன் நிறுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

இதற்கு போலிஸ் ஒரு உடனடி, விரிவான வெளிப்படையான விசாரணையை நடத்த வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset