செய்திகள் மலேசியா
சுங்கைப்பட்டாணியில் பரபரப்பு: வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஷாபு போதைப்பொருள் பறிமுதல்
சுங்கைப்பட்டாணி:
பெடோங் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில், 'ஷாபு' (Syabu) எனப்படும் போதைப்பொருளை வைத்திருந்ததாக இரு பெண்களைக் கோலா மூடா மாவட்டப் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறையினர் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒரு பெண், நாட்டின் பிரபல நடிகர் ஒருவரின் சகோதரி என நம்பப்படுகிறது. நேற்று மாலை 6:45 மணியளவில் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
50, 40 வயது மதிக்கத்தக்க அந்த இரு பெண்களும் தங்கியிருந்த வீட்டின் படுக்கையறையைச் சோதனை செய்தபோது, அங்கிருந்த படுக்கையின் மேல் ஒரு கருப்பு நிற நெகிழிப் பையில் சுற்றப்பட்ட நிலையில் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
சுமார் 5.45 கிராம் எடை கொண்ட அந்தப் போதைப்பொருள், சிறிய நெகிழிப் பைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, அந்த இரு பெண்களும் மேலதிக விசாரணைக்காகக் கோலா மூடா மாவட்டப் போலிஸ் தலைமையகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்திய மாவட்டப் போலிஸ் தலைவர் அசிஸ்டண்ட் கமிஷனர் ஹன்யன் ரம்லான், 1952-ஆம் ஆண்டு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் 39(A)1 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
கைதானவர்களிடம் இந்தப் போதைப்பொருள் எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 8, 2026, 4:55 pm
கோவிலில் மரக்கட்டை விழுந்ததில் இளம் பெண் உயிரிழந்தார்
April 8, 2026, 4:53 pm
ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைக்க 300 உதவி வார்டன்கள் நியமனம்: ஃபட்லினா
April 8, 2026, 4:51 pm
அமெரிக்கா, ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தை வரவேற்கத்தக்கது: பிரதமர்
April 8, 2026, 4:13 pm
