செய்திகள் மலேசியா
ஆசிரியர்களின் பணிச் சுமையைக் குறைக்க 300 உதவி வார்டன்கள் நியமனம்: ஃபட்லினா
புத்ராஜெயா:
மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கவும், மொத்தம் 300 மைஸ்டெப் உதவி வார்டன்கள் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் உள்ள உறைவிடப் பள்ளிகளில் பணியமர்த்தப்படத் தொடங்கியுள்ளனர்.
மாணவர்களின் பாதுகாப்பு, நலன், நல்வாழ்வு தொடர்ந்து வலுப்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்காக, குறிப்பாக இரவு நேரக் கண்காணிப்பில் உதவுவதே வார்டன்களின் பங்கு என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களிலும் பாதுகாப்பு சீர்திருத்த செயல்திட்டத்திற்கு இணங்க இத்திட்டத்தின் முன்னெடுப்பின் செயலாக்கம் தொடர்ந்து விரிவுபடுத்தப்படும்.
ஆசிரியர்கள் கற்பித்தல், கற்றல் தொடர்பான நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும்.
மேலும் மலேசிய கல்வித் திட்டம் 2026-2035-இன் இலக்குகளுக்கு ஏற்பவும் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது என்று ஃபட்லினா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
