நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ண கால்பந்து போட்டி: அரையிறுதி சுற்றில் லீட்ஸ் யுனைடெட்

லண்டன்:

எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு லீட்ஸ் யுனைடெட் அணியினர் முன்னேறி உள்ளனர்.

லண்டன் அரங்கில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் லீட்ஸ் யுனைடெட் அணியினர் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இதை தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பெனால்டியில் சிறந்து விளங்கிய லீட்ஸ் யுனைடெட் அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் யுனைடெட் ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து லீட்ஸ் யுனைடெட் அணியினர் எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

வெஸ்ட்ஹாம் அணியினர் தோல்வி கண்டு போட்டியில் இருந்து வெளியேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset