செய்திகள் உலகம்
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம்: 8 பேர் மரணம்
காபூல்:
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ஒரு பிள்ளை காயமடைந்தது.
இந்து குஷ் (Hindu Kush) மலைப்பகுதியில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
177 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
அதிர்வுகளில் ஒரு வீடு சரிந்து விழுந்ததில் 8 பேர் மாண்டதாகப் பேரிடர் நிர்வாக ஆணையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தானின் இஸ்லாமபாத் நகரிலும், இந்தியாவின் புதுடில்லியிலும் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலைகளால் சூழ்ந்திருக்கும் ஆப்கானிஸ்தானில் ஆண்டுக்குச் சராசரியாக 560 பேர் நிலநடுக்கத்தில் மரணமடைகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதில் 27 பேர் மாண்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமாயின.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2026, 2:52 pm
ஈரானின் மருத்துவமனைகள் மீது குண்டுமழை: உலக சுகாதார மையம் கண்டனம்
April 4, 2026, 11:38 am
அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஹோர்முஸ் நீரிணையை நீண்ட காலத்திற்கு மூட ஈரான் முடிவு
April 4, 2026, 8:15 am
அமெரிக்காவின் இரண்டாவது F-35 போர் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது
April 3, 2026, 4:12 pm
பிரஞ்சு அதிபரின் மண வாழ்க்கை சரியில்லை என்று கூறிய அமெரிக்க அதிபருக்கு மக்ரோன் பதிலடி
April 3, 2026, 3:55 pm
