செய்திகள் மலேசியா
பிடிஆர் என்பது ஓய்வு அல்ல, பொறுப்பு: தேசிய முதன்மைச் செயலர் ஷம்சுல் அஸ்ரி அபுபக்கர்
ஷா ஆலம்:
ஏப்ரல் 15 முதல் தொடங்கவுள்ள வீட்டிலிருந்து பணிபுரியும் (BDR) கொள்கை அரசு ஊழியர்கள் பொறுப்புகளை இலகுவாக எடுத்துக் கொள்வதற்கான வழி அல்ல, மாறாக அலுவலகத்தில் பணிபுரிவதைப்போல் அதே நிலையில் செயல்படுவதாகும்.
தேசிய முதன்மை செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர், மூத்த அதிகாரிகளால் கடுமையான கண்காணிப்புடன் பி.டி.ஆர் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க செயல்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
"தவறாக புரிந்துகொள்ளாதீர்கள், பி.டி.ஆர் என்பது படுத்து அல்லது அமர்ந்து ஓய்வெடுப்பதோ அல்லது பேரங்காடியில் பொருட்கள் வாங்குவதும் அல்ல.
'வெளியீடும் உற்பத்தித்திறனும் ஒரே அளவில் இருக்க வேண்டும், ஏனென்றால் பி.டி.ஆர் செயல்படுத்தும் அதிகாரிகளுக்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட தெளிவான கே.பி.ஐ (முக்கிய செயல்திறன் குறியீடுகள்) இருக்க வேண்டும்" என்று இங்கு சிலாங்கூர் மாநில இளைஞர், கலாச்சார வளாகத்தின் செக்க்ஷயன் 7-ல் உள்ள டேவான் ராஜா முடா முஸா மண்டபத்தில் வெள்ளியன்று நடைபெற்ற மடானி தாஅத் செத்தியா முக்கிய உரையை ஆற்றியபோது அவர் இவ்வாறு கூறினார்.
ஷாம்சுல் அஸ்ரி, இந்த கொள்கை வெறும் உடல் ரீதியான இருப்பை விட பணி முடிவுகளை அடைவதை வலியுறுத்தும் அரசு சேவை சீர்திருத்தத்தின் ஒரு பகுதி என்று விளக்கினார்.
அரசு ஊழியர்கள் படிவங்களை செயலாக்குவது அல்லது ஆவணங்களில் கையெழுத்திடுவது போன்ற நிர்வாக பணிகளை மட்டுமே செய்வதல்ல, மக்களின் நலனை உறுதிப்படுத்த அரசாங்கத்தின் கொள்கைகளை நிறைவேற்றுபவர்களாகவும் செயல்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.
தனிப்பட்ட அல்லது குறுகிய அரசியல் நலன்களால் பாதிக்கப்படாமல் அரசாங்க கொள்கைகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.
கொள்கைகளைச் செயல்படுத்துவதில் தவறுவது வெறும் நிர்வாக பலவீனமல்ல, மக்களுக்கு உதவி கிடைக்காமல் போவது, வசதிகள் பராமரிக்கப்படாமல் போவது, நாட்டின் பாதுகாப்பு பாதிக்கப்படுவது போன்று மக்களை நேரடியாக பாதிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், தற்போதைய சவால்களை விவரித்த ஷாம்சுல் அஸ்ரி, நிலையற்ற உலக பொருளாதார சூழ்நிலை நாட்டிற்கு பெரும் அழுத்தம் தருவதாகவும், மிகவும் உயர்ந்த எண்ணெய் மானிய செலவுகள் உட்பட பல அழுத்தங்கள் ஏற்படுவதாகவும் கூறினார்.
எனவே, தேவையற்ற மின்சார பயன்பாடு, நேரில் கூட்டங்கள், வெளிநாட்டு பயணங்கள் போன்ற வீணான செலவுகளைக் குறைப்பதன் மூலம் அரசாங்க அலுவலகங்கள் உட்பட அனைத்து நிலைகளிலும் சிக்கன நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே, தவறான தகவல்களைப் பரப்பாமல் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்குமாறும் அரசு ஊழியர்களுக்கு அவர் நினைவுபடுத்தினார்.
அரசு ஊழியர்கள் சமூகத்திற்கு துல்லியமான குறிப்பு மூலமாக இருக்க வேண்டும், பொது சேவை விதிமுறைகள், தகவல் தொடர்பு, அதிகாரப்பூர்வ இரகசியங்கள் தொடர்பான சட்டங்களைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
"சமூக ஊடக காலத்தில், நாம் உண்மையான தகவல்களை வழங்குவோராக இருக்க வேண்டும், அவதூறு பரப்புவோராக இல்லாமல் இருக்க வேண்டும்" என்று அவர் வலியுறுத்தினார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 1:30 pm
சரவா சிபுவில் உள்ள மகா மாரியம்மன் ஆலயத் தலைவராக மனோகரன் தேர்வு பெற்றார்
April 3, 2026, 1:01 pm
பயணிகளின் பாதுகாப்பிற்குச் சவால்: காஜாங் எம்ஆர்டி நிலையத்தில் பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டு
April 3, 2026, 12:38 pm
மலாக்காவில் பரபரப்பு: காப்பி, பிஸ்கட் தயாரிப்பில் பன்றி உரோமம்
April 3, 2026, 12:18 pm
RM3.6 மில்லியன் தங்கக் கொள்ளை சம்பவம்: பினாங்கில் ஒன்பது பேர் கைது
April 3, 2026, 12:02 pm
'மோதல்களைத் தீர்க்கவும், போரை நிறுத்தவும் சமாதானப் பேச்சுவார்த்தையே சிறந்த வழி': துன் மகாதீர்
April 3, 2026, 11:39 am
கேஎல்ஐஏ-வில் ஹெராயின் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது
April 3, 2026, 11:19 am
